6 வருஷமா துரத்தி துரத்தி லவ் டார்ச்சர் கொடுக்குறான்.... வாலிபர் மீது நடிகை நித்யா மேனன் பகீர் குற்றச்சாட்டு
Nithya Menen : நடிகை நித்யா மேனனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. பின்னர் அது உண்மையில்லை என அவரே விளக்கம் அளித்தார்.
மலையாள நடிகையான நித்யா மேனன் தமிழில் நானி நடிப்பில் வெளியான வெப்பம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து காஞ்சனா 2, மணிரத்னத்தின் ஓகே கண்மனி போன்ற படங்களில் நடித்த இவர் அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் நித்யா மேனன், தற்போது திருச்சிற்றம்பலம் என்கிற படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கியுள்ள இப்படத்தில் தேன்மொழி என்கிற கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 18ந் தேதி ரிலீசாக உள்ளது.
இதையும் படியுங்கள்... கணவர் வீட்டில் அனுபவித்த டார்ச்சர்... விவாகரத்து குறித்து முதன்முறையாக மனம்திறந்த விஜே மகேஸ்வரி
இதனிடையே சமீபத்தில் நடிகை நித்யா மேனன் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதன்பின் அது உண்மையில்லை என விளக்கம் அளித்தார் நித்யா மேனன். இந்த செய்தி வைரலாக பரவியதற்கு சந்தோஷ் வர்க்கி என்கிற இளைஞர் தான் காரணமாம். அவர்தான் நித்யா மேனனை திருமணம் செய்ய ஆசைப்படுவதாக பேட்டி அளித்திருந்தார்.
இது வைரலானதை அடுத்து, நடிகை நித்யா மேனன் அந்த இளைஞரால் தான் 6 வருடங்களாக டார்ச்சர் அனுபவித்து வருவதாக கூறி இருக்கிறார். தான் பலமுறை அவர் அழைக்கும் மொபைல் எண்ணை பிளாக் செய்தாலும், வேறு வேறு எண்களில் இருந்து அழைத்து அவன் தொல்லை தருவதாக கூறி உள்ளார். இதுவரை அவனிடமிருந்து வந்த 30 மொபைல் எண்களை தான் பிளாக் செய்துள்ளதாக நித்யா மேனன் தெரிவித்துள்ளார். இது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... சலசலப்புக்கு மத்தியிலும்... வெற்றிமாறன் படத்துக்காக சேர்ந்து பணியாற்றிய சந்தோஷ் நாராயணன் - அறிவு கூட்டணி