களைகட்டும் பெரிய வீட்டு கல்யாணம்... அம்மாவின் நிச்சயதார்த்த புடவையில் வாரிசு நடிகை வெளியிட்ட போட்டோ...!
திருமணத்திற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், நிஹாரிகா அவருடைய அம்மாவின் நிச்சயதார்த்த புடவையில் போட்டோ எடுத்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகள் நிஹாரிகா. இவர் தமிழில் கூட விஜய் சேதுபதி உடன் “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” படத்தில் நடித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நிஹாரிகாவிற்கும், குண்டூர் ஐஜி-யின் மகனான இன்ஜினியர் சைதன்யாவிற்கும் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.
நிஹாரிகா - சைதன்யா திருமணம் வரும் 9ம் தேதி உதய்பூரில் உள்ள ஆடம்பரமான ஓபராய் உடை விலாஸ் அரண்மனையில் மாலை 7.15 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்நிலையில் திருமணத்திற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், நிஹாரிகா அவருடைய அம்மாவின் நிச்சயதார்த்த புடவையில் போட்டோ எடுத்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த போட்டோவை பதிவிட்டுள்ள நிஹாரிகா 32 வருடத்திற்கு முன்பு என் அம்மாவின் நிச்சயதார்த்த போட்டோ என அதையும் பதிவிட்டுள்ளார்.
திருமணத்தில் பங்கேற்பதற்காக ஒட்டுமொத்த குடும்பத்தினரும் தனி விமானம் மூலம் உதய்பூர் கிளம்பி சென்றுள்ளனர். அந்த போட்டோக்களும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.