பெரிய இடத்து மாப்பிள்ளையான ஐ.ஜி. மகன்... வருங்கால கணவரை இறுக்கி அணைத்த படி போட்டோ வெளியிட்ட பிரபல நடிகை...!
தெலுங்கு திரையுலகின் ஹாட் டாப்பிக்காக வெளிவந்த பிரபாஸின் கல்யாணம் குறித்த மற்றொரு வதந்திக்கும் முற்றுப்புள்ளி வச்சாச்சி. தெலுங்கு திரையுலகில் அதிக ஆதிக்கம் செலுத்தி வரும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி குடும்பத்திற்கு பிரபாஸ் மருமகனாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. டோலிவுட்டே எதிர்பார்த்து காத்திருந்த அந்த செய்தி இப்போது உண்மை இல்லை என்பது நிரூபணமாகிவிட்டது. அதுமட்டுமில்லாமல் சீரஞ்சிவி குடும்பத்தில் ஒரு நல்ல காரியம் நடக்கப்போறதையும் கன்ஃபார்ம் பண்ணியாச்சு....
தெலுங்கு சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகள் நிஹாரிகா. இவர் தமிழில் கூட விஜய் சேதுபதி உடன் “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” படத்தில் நடித்துள்ளார்.
இதுவரை 5 படங்களில் நடித்துள்ள இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. அதனால் இவரது பெற்றோர் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.
இந்த சமயத்தில் தான் இளம் நடிகை நிஹாரிகாவை பிரபாஸ் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியானது.
அதை மறுத்த நிஹாரிகா “இந்த தகவல் முற்றிலும் பொய்யானது. இதுபோன்ற வதந்தியை பரப்புவது யார்? என்று தெரியவில்லை. இந்த வதந்திகளை மக்கள் நம்புவதும் எனக்கு வியப்பாக உள்ளது” என பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
தற்போது நிஹாரிகா தனது குடும்பத்தினர் பார்த்துள்ள மாப்பிளையின் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நிஹாரிகாவின் வருங்கால கணவரின் பெயர் பெயர் சைத்தன்யா. இவர் ஹைதராபாத்தில் மென்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
குண்டூர் பகுதி ஐஜியின் மகன் தான் சைத்தன்யா என்பது குறிப்பிடத்தக்கது. வருங்கால கணவருடன் நிஹாரிகா நடத்தியுள்ள போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
நிஹாரிகா - சைத்தன்யா இருவருக்கும் நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் எப்போது என்பது எதுவும் இன்னும் முடிவாகவில்லை. அடுத்தாண்டு திருமணம் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட சந்தோஷத்தில் புன்னையுடன் இருக்கும் நிஹாரிகா - சைத்தன்யா ஜோடி