பூஜா ஹெக்டேவை தொடர்ந்து... மற்றொரு விஜய் பட நாயகிக்கு கொரோனா..?
தளபதி விஜய்க்கு ஜோடியாக, 65 ஆவது படத்தில் நடித்து வரும் பிரபல நடிகை பூஜா ஹெக்டே கொரோனா தொற்று பாதிக்க பட்ட தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரை தொடர்ந்து மற்றொரு, விஜய் பட நடிகையான நந்திதா ஸ்வேதா, தற்போது கொரோனா தொற்று அறிகுறி உள்ளதால் தனிமையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கோலிவுட் திரையுலகில் நடிகர் அதர்வா, அஜித் பட நடிகை சமீரா ரெட்டி என அடுத்தடுத்த பிரபலங்கள் தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்க பட்டு வருகின்றனர்.
இதனை கட்டு படுத்த அரசு பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. மேலும் நேற்று முதல் கூடுத கட்டுப்பாடுகளை தமிழகத்தில் மாநில அரசு கொண்டுவந்துள்ளது.
தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் பரவலை தடுக்கும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மாநிலம் முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சுகாதார துறையினரும் இந்த பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய "அட்டகத்தி" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நந்திதா ஸ்வேதா கொரோனா அறிகுறி தென்பட்டதால் , வீட்டில் தனிமையில் இருப்பதாக தெரிவித்துள்ளார், மேலும் அனைவரும் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த, 'இதற்குத்தானோ ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'எதிர் நீச்சல்', 'முண்டாசுப்பட்டி' போன்ற படங்களில் நிஜ கிராமத்து பெண்களே தோற்கும் அளவிற்கு கேரக்டரோடு பொருந்தி நடித்திருந்தார் நந்திதா. இதனையடுத்து விஜய்யின் 'புலி' படத்தில் கூட சிறிய கதாபாத்திரத்தில் வந்து போனார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும், தெலுங்கில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'நெஞ்சம் மறப்பதில்லை' படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது இவரது கைவசம் IPC 376 என்கிற படம் மட்டுமே உள்ளது.
கொரோனா தொற்று அறிகுறியுடன் வீட்டில் தனிமை படுத்திகொண்டு இருக்கும் இவர், விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.