“வீ லவ் யூ பேபி மா”... கணவர் சிரஞ்சீவி சார்ஜாவை நினைத்து உருக்கமாக பதிவிட்ட நடிகை மேக்னா ராஜ்...!
அந்த புகைப்படங்கள் அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள மேக்னா ராஜ், அத்துடன் சேர்ந்து தனது கணவர் பற்றிய பதிவு ஒன்றையும் ஷேர் செய்துள்ளார்.
பிரபல கன்னட நடிகரும், ஆக்ஷன் சிங் அர்ஜுனின் சகோதரி மகனுமான சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் கடந்த 7ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார்.
39 வயதே ஆன நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம் கன்னட திரையுலகை மட்டுமல்லாது ஒட்டுமொத்த திரைப்பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சிரஞ்சீவி சார்ஜாவை 10 ஆண்டுகளாக காதலித்து மணமுடித்த நடிகை மேக்னா ராஜ் தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
கர்ப்பிணியான மேக்னா ராஜ் கணவர் உடலின் மீது படுத்து கதறி அழுததை யாராலும் மறந்திருக்க முடியாது.
கணவனின் பிரிவை தாக்காமல் தவித்த மேக்னா ராஜ் கடந்த மாதம் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில் கூட, சிரு தனக்கு உன்னதமான பரிசை கொடுத்துவிட்டு சென்றுள்ளதாகவும், அவருடைய புன்னகையை மீண்டும் காண காத்திருப்பதாகவும் உருக்கமாக பதிவிட்டார்.
சிரஞ்சீவி சார்ஜா உயிரிழந்து இன்றுடன் ஒரு மாதமாகிறது.
இதனால் குடும்பத்தார் ஒரு பிரார்த்தனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அந்த புகைப்படங்கள் அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள மேக்னா ராஜ், அத்துடன் சேர்ந்து தனது கணவர் பற்றிய பதிவு ஒன்றையும் ஷேர் செய்துள்ளார்.
என் அன்புள்ள சிரு... சிரு என்றாலே கொண்டாட்டம்... என்னுடன் எப்போதும் இருக்கும். எனக்கு தெரியும் இதை நீங்கள் வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்டீர்கள்!. சிரு தான் நான் சிரிக்க காரணம்...
அவர் எனக்கு கொடுத்தது மிகவும் விலைமதிப்பற்றது. என் குடும்பம்... நாங்கள்... ஒவ்வொரு நாளும் நீங்கள் விரும்பியது போன்று குழந்தைக்காக காத்திருக்கிறோம். அன்பு, சிரிப்பு, சேட்டைகள், நேர்மை மற்றும் மிக முக்கியமாக ஒன்றிணைத்தல். வீ லவ் யூ பேபி என குறிப்பிட்டுள்ளார்.
அதை ஆமோதிக்கும் வகையில் சிரஞ்சீவி சார்ஜாவின் பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்ற பலரும் சிரித்த முகத்துடன் இருந்தனர்.
அவரது புகைப்படம் முன்பு நின்று பலரும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்