ஹனிமூன் முடிந்து வந்ததும் காஜல் அகர்வால் செய்யப்போகும் அதிரடி விஷயம்... கசிந்தது ரகசிய தகவல்...!
தற்போது தேனிலவில் ஜாலியாக கணவருடன் நேரத்தை செலவிட்டு வரும் காஜல் அகர்வால் மும்பை வந்ததுமே அதிரடியான காரியம் ஒன்றை செய்யப்போகிறாராம்.
கடந்த 30ம் தேதி பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கும் தொழிலதிபர் கெளதம் கிட்சிலுவுக்கும் மும்பையில் திருமணம் நடைபெற்றது.
அதன் பின்னர் காதல் கணவருடன் மும்பையில் உள்ள புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்தார் காஜல் அகர்வால். அந்த புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.
தற்போது காதல் கணவருடன் மாலத்தீவில் தேனிலவிற்கு சென்றுள்ள காஜல் அகர்வால் அங்கு சிவப்பு நிற ஹாட் உடையில் தாறுமாறு போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க உள்ள காஜல் அகர்வால் கைவசம் தமிழில் இந்தியன் 2, ஹேய் சினாமிகா ஆகிய படங்களும், தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படமும் உள்ளது.
தற்போது தேனிலவில் ஜாலியாக கணவருடன் நேரத்தை செலவிட்டு வரும் காஜல் அகர்வால் மும்பை வந்ததுமே அதிரடியான காரியம் ஒன்றை செய்யப்போகிறாராம்.
அதாவது தேனிலவு முடிந்து நாடு திரும்பியதும் சென்னை, ஐதராபாத்தில் தனித் தனியாக இரண்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளாராம்.
அதில் கோலிவுட், டோலிவுட்டில் உள்ள தனக்கு நெருக்கமான பிரபலங்களை மட்டும் அழைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.