கறுப்பு தாவணியில் அழகு தேவதையாய் மிளிரும் அதுல்யா... லைட்டா இடை தெரிய போஸ் கொடுத்து ஏங்க வைக்கும் கிளிக்ஸ்...!
தமிழ் சினிமாவில் இளம் நடிகையான அதுல்யா ரவி நீண்ட நாட்களுக்குப் பிறகு பாவாடை தாவணியில் நடத்தியுள்ள போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது.
‘நாடோடிகள் 2’, ‘ஏமாளி’, ‘அடுத்த சாட்டை’ போன்ற படங்களில் அதுல்யாவின் நடிப்பு தனியாக தெரியவே ரசிகர்களின் நெஞ்சைக் கவர ஆரம்பித்தார்.
கிளாமர் இல்லாமல் நடித்து வந்த அதுல்யா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் கிளாமர் கலந்து நடித்த கேப்மாரி திரைப்படமும் இளசுகளை வெகுவாக கவர்ந்தது. அதையடுத்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார்.
தற்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘வட்டம்’, சாந்தனு உடன் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ போன்ற படங்கள் கைவசம் உள்ளன.
கோவை அழகியான அதுல்யாவின் குழந்தை தனம் மாறாத முகமும், குறும்புச் சிரிப்புமே பல ரசிகர்களை வசீகரம் செய்து வருகிறது. படங்களில் பெரிதாக கவர்ச்சி காட்டாத அதுல்யா, போட்டோ ஷூட் என்றால் டோட்டலாக கவர்ச்சி மாறிவிடுகிறார் என ரசிகர்கள் குமுறி வந்தனர்.
அப்படி வேதனைப்பட்ட ரசிகர்களை குஷியாக்கும் விதமாக அம்சமான பாவாடை தாவணியில் அசத்தலாக ஒரு போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தன்னுடைய எலுமிச்சை நிறத்திற்கு எடுப்பாக கறுப்பு நிற தாவணி, பாவாடையில் அழகு சிலை போல் அதுல்யா கொடுத்துள்ள போஸ்கள் ஒவ்வொன்றும் கண்பட வைக்கிறது.
லைட்டாக இடை தெரிய ரசிகர்களின் மனம் கவர்ந்த அந்த க்யூட் சிரிப்புடன் வசீகரித்துள்ளார் அதுல்யா.
அதுல்யாவின் அழகை பார்த்து வர்ணிக்க வார்த்தை இல்லாமல் திண்டாடும் ரசிகர்களோ... இதே மாதிரி போட்டோ ஷூட் பண்ணுங்க ரொம்ப அழகாக இருக்கீங்க என வாயார பாராட்டி வருகின்றனர்.