’வாயை மூடிப் பார்க்கவும்’... அனு சித்தாரா சேச்சியின் அநியாயமான படங்கள்...
டைரக்டர்களை ’ஒன்மோர் ஒன்மோர்’கேட்டே டயர்டாக வைக்கும் நடிகைகளுக்கு மத்தியில் சிங்கிள் டேக் ஆர்டிஸ்ட் என்ற நற்பெயருடன் தமிழுக்கு எண்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகை அனு சித்தாரா. சீமானின் தயாரிப்பு நிறுவனமான தம்பி திரைக்களம் தயாரிக்கும் அமீரா’படத்துக்காக கேரளாவிலிருந்து இறக்குமதி ஆகியிருக்கும் இவருக்கு, தமிழ் சினிமாவின் அடுத்த நம்பர் ஒன் நடிகை இவர்தான் என்று சர்டிபிகேட் தருகிறார்கள் படப்பிடிப்புக் குழுவினர்.
சீமானிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ரா.சுப்ரமணியன் இயக்கும் இப்படத்திற்கு ‘டூலெட்’ படம் மூலம் பல விருதுகளை கைப்பற்றிய செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். இஸ்லாமியப் பெண் ஒருவரைச் சுற்றி நடக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதால் படத்திற்கு ‘அமீரா’ என்று தலைப்பு வைத்துள்ளன.ர் அமீரா என்றால் இளவரசி என அர்த்தம். படம் எதிர்பார்த்ததை விட மிக விரைவாகவே முடிந்துவிட்டதால் மிகவும் உற்சாகமாகிவிட்டாராம்.
இதற்கு முதல் காரணம் படத்தின் நாயகி அனு சித்தாரா தான், என்று பெருமையோடு சொல்லும் இணைத் தயாரிப்பாளர் வெற்றிகுமரன், ”40 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால், அதற்கு முன்னதாகவே முடியப் போகிறது. ஒரு சில காட்சிகளும், க்ளைமாக்ஸ் காட்சியும் எடுத்துவிட்டால் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும். இதற்கு காரணம் நாயகி அனு சித்தாரா. மொழி தெரியாதவராக இருந்தாலும், காட்சிகளை புரிந்து உள்வாங்கி நடிக்கிறார். மோகன்லால், திலீப் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர், மலையாளத்தில் சிங்கிள் டேக் நடிகை என்று பெயர் வாங்கியிருக்கிறார். மொழி தெரியாத தமிழ் சினிமாவிலும் அவருக்கு அத்தகைய பெயர் கிடைக்கும்படி நடிக்கிறார் என்பது தான் அவரது சிறப்பு” என்றார்.
அனு சித்தாரா கண்கள் நடிக்கும் நடிப்பிலேயே ஒரு படத்தை முடித்துவிடலாம், என்று கூறும் இயக்குநர், சீமான் மற்றும் ஆர்.கே.சுரேஷ் இருவரும் 20 நாட்களில் தங்களது காட்சிகளை நடித்து கொடுத்துவிட்டார்கள், என்றும் தெரிவித்தார்.தென்காசி மற்றும் சென்னையில் வளர்ந்து வரும் ‘அமீரா’வின் படப்பிடிப்பு விரைவில் முடிய உள்ளது.
என்ன விலை அழகே சொல்லு விலைக்கு வாங்க வருவேன்...
சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே...
மஞ்சில் விரிஞ்ச பூவே...
அனு சித்தாராவே உன்னை ஆராதிக்கிறேன்...
ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது...
ரோஸ் இஸ் எ ரோஸ் இஸ் எ ரோஸ்...
இன்னும் என்னை என்ன செய்யப்போகிறாய் அன்பே அன்பே...
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு
என்ன சத்தம் இந்த நேரம்...?
மவுனமான நேரம் இளமனதில் என்ன பாரம்?