அட அமலா பாலா இது?... நடுக்காட்டில் நடத்திய மிரள வைக்கும் போட்டோ ஷூட்...!
நடுக்காட்டில் அமலா பால் நடித்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அமலா பால் தனது ஆடை படத்திற்கு பிறகு முற்றிலும் ஆளே மாறிவிட்டார். இருக்கிற இடம் தெரியாமல் இருந்தவர் இப்போது தினமும் ஒரு சர்ச்சை போட்டோக்களை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து வருகிறார்.
ஆண் நண்பரின் மொட்டை தலையில் முத்தம் கொடுப்பது, படுக்கையறை போட்டோஸ், நண்பர்களுடன் சரக்கடிப்பது என சர்ச்சை போட்டோக்களை பதிவிட்டு தன் இருப்பை ரசிகர்களுக்கு நியாபகப்படுத்தி வருகிறார்.
ஆடை, ராட்சசன் பட வெற்றிகளைத் தொடர்ந்து அமலா பால் கைவசம் அதே அந்த பறவை போல திரைப்படம் மட்டுமே தயாராக உள்ளது. ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அமலா பால், அந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
தற்போது அம்மாவுடன் கேரளாவில் வசித்து வரும் அமலா பால் குட்டை, குட்டையான உடைகளை அணிந்து கொண்டு உடலை வளைத்து நெளித்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
குடியும் கும்மாளமுமாய் இருப்பது முதல் பிகினி உடை வரை அனைத்து விதமான போட்டோக்களையும் வெளியிட்டு சர்ச்சை நாயகி என்ற பட்டத்திற்கு சொந்தக்காரியான அமலா பால், தற்போது படு வித்தியாசமான போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
நடுக்காட்டில் வித்தியாசமான நகைகள் மற்றும் உடை அலங்காரத்தில் அமலா பால் வெளியிட்டுள்ள போட்டோக்கள் லைக்குகளை குவித்து வருகிறது.
ஒற்றை இலையை கையில் வைத்துக்கொண்டு கிக்கேற்றும் பார்வையில் சொக்க வைக்கும் அமலா பாலின் இந்த போட்டோவை பார்த்து கேரளாவின் தீபிகா படுகோனே என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
காட்டு ராணி போல் கெத்தாக போஸ் கொடுத்திருக்கும் அமலா பாலின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.