ஐஸ்வர்யா ராய் உடல்நிலை எப்படி இருக்கு? மருத்துவமனை நிர்வாகம் கூறிய தகவல்!
வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு இருந்த நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவருடைய மகள் ஆராத்யா மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டதை தொடர்ந்து, தற்போது இவர்களுடைய உடல்நிலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருடைய மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டு அறிகுறி தென்பட்டதால், இருவரும் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து அமிதாப் குடும்பத்தினர் எம்.பி ஜெயா பச்சன், ஐஸ்வர்யா ராய்,மற்றும் ஆராத்யா ஆகியோருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.
அதில் ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யாவிற்கு எந்த அறிகுறி இல்லை என்றாலும் கொரோனா பாசிட்டிவ் என வந்தது. இதனால் அவர்கள் இருவரும் வீட்டிலேயே தனிமை படுத்தப்பட்டனர்.
ஐஸ்வர்யா ராய் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அடிக்கடி சென்று வந்த நான்கு பங்களா இழுத்து மூடி, சீல் வைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட இடமாகவும் மாற்றப்பட்டது.
இதுநாள் வரை வீட்டில் தனிமை படுத்தப்பட்டிருந்த ஐஸ்வர்யா ராய்க்கும் அவருடைய மகளுக்கும் லேசான அறிகுறிகள் தென்பட்டதாகவும், இதனால் இவர்களும் உடனடியாக நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஏற்கனவே அமிதாப் மற்றும் அபிஷேக் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவருடைய மகளும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராய் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில், இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது அவருடைய ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.