தடையை மீறி ஜாலி ட்ரிப்... நடிகர்கள் சூரி, விமலுக்கு அபராதத்துடன் கிடைத்த எச்சரிக்கை...!
கொரோனா பிரச்சனை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பக்கத்து மாவட்டத்திற்கு செல்ல கூட இ-பாஸ் பெறுவது கட்டாயம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் சுற்றுலா தளங்களுக்கு செல்லவும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் நடிகர்கள் சூரி, விமல் ஆகியோர் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதலே சுற்றுலாதளமான கொடைக்கானலுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏரிக்கு அருகேயுள்ள வனத்துறைக்கு சொந்தமான விடுதியில் தங்க சிறப்பு அனுமதி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் முதலே பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த விடுதியில் தங்கிய பேரிஜம் ஏரியில் அத்துமீறி மீன் பிடித்ததாக நடிகர் விமல், சூரி மீது மகேந்திரன் என்பவர் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் கடந்த 18ம் தேதி பேரிஜம் ஏரியில் அத்துமீறி சூரி, விமல் உள்ளிட்ட நான்கு பேர் மீன் பிடித்ததும், அதை சோசியல் மீடியாவில் ஷேர் செய்ததும் தெரியவந்துள்ளது.
Vimal
சூரி, விமல் உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த வனத்துறை சரக கண்காணிப்பாளர் தேஜஸ்வி, தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் இனி அத்துமீறி நுழைய கூடாது என நடிகர்கள் இருவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விமல், சூரி அத்துமீறி நுழைந்தது குறித்தும் வனத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
நடிகர்கள் முறையாக இ பாஸ் பெற்று தான் வந்தனரா என்பது குறித்து கொடைக்கானல் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
லாக்டவுன் நேரத்தில் தடையை மீறி ஜாலி ட்ரிப் அடித்த நடிகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கொடைக்கானல் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.