உண்மையிலேயே தேம்பி தேம்பி அழுத விஜய்..! 9 வருடத்திற்கு பின் நடிகை வெளியிட்ட தகவல்!
ஷூட்டிங் ஸ்பாட்டில், உண்மையிலேயே நடிகர் விஜய் தேம்பி தேம்பி அழுத விஷயத்தை முதல் முறையாக பிரபல நடிகை வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் எம்.ராஜா இயக்கத்தில், கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேலாயுதம்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருப்பார்.
முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஜெனிலியா நடித்திருப்பார்.
அதே போல், நடிகர் விஜய்யின் தங்கையாக, மலையாள நடிகை சரண்யா மோகன் நடித்திருந்தார்.
சிறந்த அண்ணன் தங்கை உறவு குறித்தும், காதல், செண்டிமெண்ட், காமெடி என அணைத்து அம்சங்களுடன் இந்த படம் வெளியாகி இருந்தாலும், எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை.
இந்நிலையில் இந்த படத்தில் நடத்த சுவாரஸ்யமான நிகழ்வுகள் குறித்து, பேட்டி ஒன்றில் பகிர்துகொண்டுள்ளார்.
அப்போது இந்த படத்தில் சரண்யா மோகன் இறந்தது போல் ஒரு சீன் இருக்கும் அதில் உண்மையிலேயே எமோஷ்னல் ஆகி, விஜய் தேம்பி தேம்பி அழுததாக தெரிவித்துள்ளார் சரண்யா.
அதாவது இந்த சீன் எடுக்கும் போது, 2 வயதில் இறந்து போன விஜய்யின் தங்கை நியாபகம் வர, அதனை நினைத்து விஜய் அழுதாராம். இந்த ரகசியத்தை கிட்ட தட்ட 9 வருடங்களுக்கு பின் தெரிவித்துள்ளார் சரண்யா.