“சினிமாவை விட்டு சில காலம் விலகுகிறேன்”... உடல் நலக்குறைவால் பிரபல நடிகர் வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு...!
இதனால் சஞ்சய் தத் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான சஞ்சய் தத்திற்கு கடந்த 9ம் தேதி திடீர் மூச்சு திணறல் மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதையடுத்து மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஐசியூ-வில் சஞ்சய் தத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதைக் கேள்விப்பட்ட ரசிகர்களும், பாலிவுட் திரையுலகினரும் சஞ்சய் தத் உடல் நலம் பெற வேண்டி தீவிர பிரார்த்தனை செய்தனர்.
ரசிகர்களின் வேண்டுதலுக்கு பலனாக உடல் நலம் சீரானதைத் தொடர்ந்து நடிகர் சஞ்சய் தத் நேற்று வீடு திரும்பினார்.
சஞ்சய் தத் வீடு திரும்பிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது
தற்போது சஞ்சய் தத்தை மருத்துவர்கள் ஓய்வில் இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளனர். இதனால் சஞ்சய் தத் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மருத்துவ காரணங்களுக்காக சில காலம் திரையுலகை விட்டு விலகுவதாக நடிகர் சஞ்சய் தத் அறிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நண்பர்களே, மருத்துவ ரீதியான காரணங்களால் நான் என் சினிமா பணியிலிருந்து சிறுது காலம் ஓய்வு எடுத்துக்கொள்கிறேன்.
என் குடும்பத்தினரும், எனது நண்பர்களும் என்னுடன் உள்ளனர். எனது நலம் விரும்பிகள் யாரும் கவலைப்படவோ, தேவையின்றி எதுவும் யூகிக்கவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அன்பு மற்றும் நல் வாழ்த்துகளோடு நான் விரைவில் மீண்டும் திரும்பி வருவேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இதனால் சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் சஞ்சய் தத் விரைவில் குணமடைந்து மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டுமென வாழ்த்து கூறி வருகின்றனர்.