ஓவர் சீன் போட்ட நயன்தாராவை தூக்கி எறிந்த பிரபல நடிகர்..! கேட்ட சம்பளத்தில் தலை சுற்றி போன தயாரிப்பாளர்..!
சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிக்க, நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், இவர் கேட்ட சம்பளம் தலை சுற்ற வைத்ததால் நயன்தாராவை இந்த படத்தில் இருந்து அந்த ஹீரோ தூக்கி எரிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
35 வயதனாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அளவிற்கு உயர்ந்து நிற்கிறார் நயன்தாரா.
முன்னணி நடிகர்களின் படம் என்றாலே நயன்தாரா கால்ஷீட் முக்கியம் என்பது போல் ஆகிவிட்டது. அப்படித்தான் கடந்த ஆண்டு வெளியான பிகில், தர்பார் இரண்டு திரைப்படங்களிலும் நயன்தாராவிற்கு முக்கியத்துவமே இல்லை என்றாலும், ஸ்டார் ஹீரோக்களுக்காக கோடிகளில் சம்பளம் கொடுத்து நடிக்க வைத்திருப்பார்கள்.
தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படத்தில் முதன் முறையாக நயன்தாரா அம்மன் கெட்டப்பில் நடித்துள்ளார். கொரோனா காரணமாக தியேட்டர்கள் திறக்கபடாததால் படம் வெளியாகாமல் உள்ளது.
அதுமட்டுமின்றி காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்கும் காத்து வாக்குல இரண்டு காதல், அவருடைய தயாரிப்பில் நெற்றிக்கண், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் வெயிட்டான கதாபாத்திரம் என அம்மணி கைவசம் பட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன.
உச்சத்தில் இருக்கும் மார்க்கெட்டை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் நயன்தாரா, சமீபத்தில் இந்தி பட ரீமேக் ஒன்றில் நடிப்பதற்காக கால்ஷீட் கேட்டு வந்த தயாரிப்பாளரிடம் கேட்ட சம்பள தொகை கோலிவுட்டில் பல கிசு கிசுக்கள் கிளம்பியது.
ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான அந்தூதுன் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. இந்த படத்தை தமிழ் ரீமேக்கில் நயன்தாரா நடிக்க வேண்டும் என இந்த படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜனும், ஹீரோவாக நடிக்க உள்ள பிரஷாந்தும் மாறி மாறி பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.
ஆனால் நயன்தாரா 6 . 5 கோடியில் கேட்டு கறாராக பேசியுள்ளார். குறிப்பிட்ட பட்ஜெட்டில் படத்தை முடிக்க தயாராக இருந்த பட குழுவிற்கு இது, சிரமத்தை ஏற்படுத்தியது.
இதனால் இந்த படத்தில் இருந்து நயன்தாராவை தூக்கி எரிந்து விட்டு, மற்றொரு முன்னணி நடிகையிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம், படக்குழுவினர்.
ஏற்கனவே இதே படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க வந்த வாய்ப்பை, கள்ளத்தாளனோடு சேர்ந்து கொலை செய்யும் கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது என, நயன்தாரா நேரடியாக கூறி விட்டதாக சில பேச்சுகள் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.