நடிகர் கார்த்திக்கு குழந்தை பிறந்தாச்சு..! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் சிவகுமார் குடும்பம்..!
நடிகர் கார்த்தி இரண்டாவது முறையாக அப்பாவாக புரோமோஷன் வாங்க உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தோம். இந்த நிலையில் தற்போது குழந்தை பிறந்த விஷயத்தை கார்த்தி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அறிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், சூர்யாவின் தம்பியுமான கார்த்தி பருத்தி வீரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முதல்படமே சூப்பர் டூப்பர் ஹிட்டாக தமிழ் சினிமாவின் இளம் நாயகனாக வலம் வர ஆரம்பித்தார்.
'ஆயிரத்தில் ஒருவன்', 'மெட்ராஸ்', 'கைதி' எனப் பல முக்கியமானப் படங்களில் நடித்திருக்கும் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்துவருகிறார்.
நடிகர் கார்த்திக்கும் ஈரோட்டைச் சேர்ந்த ரஞ்சனி என்பவருக்கும் கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பெற்றோர்கள் சம்மதத்துடன் கோவையில் கோலாகலமாக திருமணம் நடந்தது.
அதையடுத்து கார்த்தி - ரஞ்சனி தம்பதிக்கு கடந்த 2013ம் ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பெயர் உமையாள்.
தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் கார்த்தியின் மனைவி ரஞ்சனி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார். லாக்டவுனில் கார்த்தி சொன்ன நல்ல செய்தியால் சிவக்குமார் குடும்பத்தினர் மட்டுமல்ல ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
முதல் முன்று மாதங்கள் சென்னையில் இருந்த கார்த்தி மற்றும் ரஞ்சனி ஜூன் மாதவாக்கில் சொந்த ஊரான கவுண்டம்பாளையம் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரஞ்சனி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், இவருக்கு தற்போது அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளதாக கார்த்தி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் கடவுளுக்கும் தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார்.