காமெடி நடிகர் கவுண்டமணி கமிஷ்னர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்..!
பிரபலங்கள் பற்றி அடிக்கடி வதந்திகள் பரவி வருவது வழக்கமாகி உள்ளது. அந்த வகையில் ஊடகம் ஒன்றில், கவுண்டமணியின் உடல் நலம் குறித்து பரப்பப்பட்ட வதந்திக்கு எதிராக, தற்போது கவுண்டமணி தன்னுடைய லாயர் மூலம் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் கலக்கல் காமெடி நடிகர்களில் ஒருவர் கவுண்டமணி. இவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக வதந்தி பரவியதால் திரையுலகினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவரது தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.
நீண்ட இடைவெளிக்கு பின் புதிய படத்தில் ஒப்பந்தமாகி அந்த படத்திற்கான பணிகளை அவர் செய்து வருவதாகவும் கொண்ட கவுண்டமணி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கவுண்டமணி குறித்து அடிக்கடி பரப்பப்படும், வதந்திக்கு முற்று புள்ளி வைக்கும் விதத்தில், கவுண்டமணி தரப்பிலிருந்து கமிஷ்னர் அலுவலகத்தில் அவரது லாயர் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதில் கிட்ட தட்ட 50 வருடங்களாக திரையுலகில் இருந்து வரும், 86 வயதான கவுண்டமணி, உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் கோரிக்கை விடுக்கபப்ட்டுள்ளது.
எனவே விரைவில் காமெடி நடிகர் கவுண்டமணி குறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.