ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய துல்கர் சல்மான்... வைரல் போட்டோஸால் ரசிகைகள் அதிர்ச்சி...!
தமிழ், மலையாளம், தெலுங்கு ரசிகைகளின் மனம் கவர்ந்த துல்கர் சல்மானின் லாக்டவுன் லுக்கை பார்த்தால் அவரே என அடையாளமே தெரியவில்லை.
பிரபல மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான். செகண்ட் ஷோ என்ற மலையாள படம் மூலம் திரைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தார் துல்கர் சல்மான். துறு துறு சாக்லெட் பாயாக வலம் வந்த துல்கர் சல்மான் இளம் பெண்களின் கனவு நாயகன் பட்டியலில் இடம் பிடித்தார்.
பெங்களூர் டேஸ், காம்ரேட் இன் அமெரிக்கா, கம்மாட்டி பாடம், பறவா உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து ஹிட்டடித்து வசூலை வாரிக்குவித்தன.
குறிப்பாக மற்றவர்களை சந்தோஷப்படுத்திவிட்டு மறைந்து போகும் மனிதனாக துல்கர் சல்மான் நடித்து அசத்திய படம் "சார்லி" . அந்தப் படம் மலையாள ரசிகர்களை மட்டுமல்லாது, தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. எந்த நேரமும் உற்சாகத்துடனும், எதையும் பாசிடிவாகவும் எடுத்துக்கொள்ளும் துறுதுறு இளைஞனாக துல்கர் சல்மான் பட்டையை கிளப்பியிருந்தார். மலையாளத்தில் மட்டுமல்லாது, கோலிவுட், பாலிவுட் படங்களிலும் பட்டையை கிளப்பி வருகிறார் துல்கர் சல்மான்.
"வாயை மூடி பேசவும்" என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான துல்கர் சல்மான். மாதவனுக்கு அடுத்து அழகான சாக்லெட் பாயான துல்கர் சல்மான், தமிழ் ரசிகைகளின் கனவு கண்ணனாக மாறினார்.
மணிரத்னம் இயக்கத்தில் "ஓ காதல் கண்மணி" படம் தமிழ் ரசிகர்களிடம் துல்கர் சல்மானை பிரபலமாக்கியது. அந்த படத்தை பார்த்த இளம் பெண்கள், நமக்கு இப்படி ஒரு லவ்வர் இருந்தால் நல்லா இருக்கும் என உருகும் வண்ணம் காதல் மன்னனாக வலம் வந்தார்.
அதன் பின்னர் "நடிகையர் திலகம்" படத்தில் காதல் மன்னன் ஜெமினி கணேசனாகவே உருமாறி, தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
கொரோனா லாக்டவுனுக்கு முன்னதாக தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட்டடித்தது.
இந்த படத்தை சமீபத்தில் ஓடிடியில் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே இயக்குநர் தேசிங்கு பெரியசாமியை போனில் அழைத்து வாழ்த்து கூறி அசத்தினார். அந்த அளவிற்கு படம் பட்டையைக் கிளப்பியது.
தற்போது லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் இல்லாததால் வீட்டில் முடங்கி கிடக்கும் துல்கர் சல்மான் வெளியிட்ட நியூ லுக் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பல பிரபலங்களும் கடந்த சில மாதங்களை தங்களது முடியை பராமரிக்காமல் இருக்கும் சில புகைப்படங்களை எடுத்து இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
அதேபோல் துல்கர் சல்மானும் நீண்ட தலைமுடி, தாடியுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆனால் இளம் ரசிகைகளின் மனதை தான் கொஞ்சம் ஆப்செட்டாக்கியுள்ளது.