கார்னெர் செய்ய படுகிறாரா ரியோ..! கோபத்தில் எழுந்து சென்ற பரபரப்பான புரோமோ..!
பிக்பாஸ் வீட்டில் தற்போது பந்துகளை பிடித்து சேகரிக்கும் டாஸ்கை தனி தனியாக போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள். இதுகுறித்து ஏற்கனவே முதல் புரோமோவில் பார்த்தோம். இதை தொடர்ந்து வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில், ஆரி தன்னை கார்னெர் செய்வதாக ரியோ கோபப்பட்டு அந்த இடத்தை விட்டு எழுந்து செல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது.
ஆஜித், ஷிவானி, ஆரி என அனைவரும், நேற்று இரவு முழுவதும் பந்துக்காக கண் விழித்திருந்ததால், பகலில் தூங்குகிறார்கள்.
இதனை கிண்டல் செய்வது போல், பிக்பாஸ் "தூங்காதே தம்பி தூங்காதே" பாடலை போட அனைவரும் எழுந்து விறுவிறுப்பாக பந்துகளை பிடிக்க தயாராகிறார்கள்.
பின்னர் ஒருவர் பின் ஒருவர் தங்கள் பெயர் வரும் போது பந்துகளை பிடிக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
இதை தொடர்ந்து பிக்பாஸ் புதிய டாஸ்க் ஒன்றை கொடுக்கிறார், அதில் போட்டியாளர்களின் பங்களிப்பு, ஈடுபாடு, மற்றும் போட்டியிடும் தன்மையை கருத்தில் கொண்டு, உங்களை நீங்களே வரிசை படுத்திகொண்டு, அதற்கான காரணத்தையும் கூறவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் இதற்காக அனைவரரும் ஒன்று கூடி பேசுகிறார்கள். அப்போது ஆரி, ஒருமுறை சொன்னால் இன்னொரு முறை சொல்ல மாட்டீர்களா என கேள்வி கேட்கிறார்.
இதற்கு ரியோ தான் 100 சதவீதம் கொடுத்திருக்கிறேன் கூறி, இது தான் கார்னெர் என கோபப்பட்டு எழுந்து செல்கிறார்.
இந்த வரிசை படுத்துதல் கேம் மூலம், கண்டிப்பாக இன்றைய தினம் மிகப்பெரிய பிரச்சனை போட்டியாளர்களுக்குள் வெடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.