திருமணம் முடிந்த கையோடு ஏழை மக்களுக்கு உதவிய ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி... குவியும் வாழ்த்துக்கள்
Aadhi - Nikki galrani : திருமணம் முடிந்த கையோடு ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி ஏழை மக்களுக்கு செய்த மாபெரும் உதவி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சினிமா நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்துகொள்வது தொடர்கதை ஆகி வருகிறது. ஏற்கனவே அஜித் - ஷாலினி, சூர்யா - ஜோதிகா, சினேகா - பிரசன்னா என ரீல் ஜோடிகள் ரியல் ஜோடிகள் ஆன நிலையில், தற்போது அந்த லிஸ்ட்டில் புதுவரவாக இணைந்துள்ளவர்கள் ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி.
யாகாவராயினும் நாகாக்க மற்றும் மரகத நாணயம் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்த ஆதியும், நிக்கி கல்ராணியும், அதில் நடித்தபோது காதலில் விழுந்தனர். இதையடுத்து குடும்பத்தினர் சம்மதத்துடன் இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதில் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
இதையடுத்து இவர்களது திருமணம் கடந்த மே 18-ந் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அன்று இரவு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான திரைப் பிரபலங்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஆதி - நிக்கி கல்ராணியின் திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகின.
இந்நிலையில், திருமணம் முடிந்த கையோடு ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி ஏழை மக்களுக்கு செய்த மாபெரும் உதவி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உணவின்றி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு உணவளித்து பசியாற்றி உள்ளது அந்த ஜோடி. அவர்களின் மனிதநேயமிக்க இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... cannes 2022 : கேன்ஸ் பட விழாவில் நடிகையின் ஆடை திடீரென கழன்று விழுந்ததால் பரபரப்பு - தீயாய் பரவும் போட்டோஸ்