'800 ' படத்தின் கதை விஜய் சேதுபதிக்கு முன் இவருக்கு தான் சென்றதா..? நிராகரித்து கெத்து காட்டிய இளம் நாயகன்..!
விஜய் சேதுபதிக்கு எதிராக உருவெடுத்துள்ள விஷயம் 800 படத்தில், அவர் நடிக்க கூடாது என்கிற விவகாரம். இந்நிலையில் இந்த படத்தின் கதை, விஜய் சேதுபதிக்கு செல்வதற்கு முன், இளம் நடிகர் ஒருவருக்கு சென்றதாகவும் அதனை அவர் நிராகரித்து விட்டதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். ஸ்ரீபதி இயக்கும் அந்த படத்தில் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிப்பது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு போஸ்டர் வெளியாகி வைரலானது.
கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்திற்கு 800 என பெயர் வைத்துள்ளனர். போஸ்டரில் விஜய் சேதுபதி பார்க்க அச்சு அசலாக முத்தையா முரளிதரன் போன்றே இருந்தார்.
எப்போதுமே தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை சிறப்பாக செய்யும் விஜய்சேதுபதி, முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை கணிசமாக குறைத்திருந்துள்ளார்.
விஜய்சேதுபதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என்றாலே அவருடைய ரசிகர்கள் செம்ம குஷியாகிவிடுவார்கள். ஆனால் இந்த முறையோ அப்படியே ஆப்போசிட்டா #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ்டேக்கை தேசிய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
காரணம் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படும் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த படம் குறித்த அறிவிப்பு வந்த முதல் நாளில் இருந்தே சோசியல் மீடியா மூலமாக தமிழ் ரசிகர்கள் பலரும் விஜய் சேதுபதிக்கு இந்த கோரிக்கை வைத்து வந்தனர். இயக்குனர் சீனு ராமசாமி, பாரதி ராஜா, சேரன், தாமரை, சீமான் போன்ற சில அரசியல் தலைவர்களும் இந்த படத்தை விஜய் சேதுபதி கைவிட வேண்டும் என தங்களுடைய வேண்டுகோளை அவருக்கு வைத்து வருகிறார்கள்.
இந்த தகவல் ஒரு புறம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த படத்தின் கதை ஒரு இளம் ஹீரோவுக்கு சென்றதும் அதை அவர் அரசியல் உள்ளதால் நிராகரித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
அவர் வேறு யாரும் இல்லை, இண்டிபெண்டெண்ட் சிங்கரும்... அசுரன் படத்தில் தனுஷுக்கு மூத்த மகனாக நடித்த, வளர்த்து வரும் இளம் நாயகனுமான டி ஜே தான் என்கிற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.