காணாமல் போன நடிகைகள் மத்தியில்... நான்கு வருடத்திற்கு முன்பே கெத்து காட்டிய நயன்தாரா! கடைசியில் இருந்த சமந்தா!
2016 ஆம் ஆண்டு, அதிக சம்பளம் வாங்கி மற்ற நடிகைகளை பின்னுக்கு தள்ளியவர் தான் நயன்தாரா. அப்போது டாப் 10 லிஸ்டில் இடம்பிடித்த நடிகைகள் இன்று... மார்க்கெட் சரிந்து தமிழ் திரையுலகில் இருந்து காணாமல் கூட போய் விட்டனர். அவர்கள் யார் என்பதை பார்க்கலாம் வாங்க.
நயன்தாரா:
நடிகை நயன்தாரா ரீ-என்ட்ரி கொடுத்தது முதல், இவர் நடிப்பில் வெளியான தனி ஒருவன், மற்றும் நானும் ரவுடி தான் படங்கள் ஒன்றின் பின் ஒன்றாக சூப்பர் ஹிட்டாக அமைந்ததால், நயன் ஒரு படத்திற்கு 2.5 கோடி முதல் 3 கோடி வரை சம்பளமாக பெற்றார்.
அனுஷ்கா:
இவரை தொடர்ந்து, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களையும், கவர்ச்சியை கூட அழகாய் காட்டிய நடிகை அனுஸ்கா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்தார். ஒரு பாடதிக்ரு 2 கோடி முதல் 3 கோடி வரை சம்பளமாக பெற்றார்.
தமன்னா:
இந்த பட்டியலில் 3 ஆவது இடத்தில் இருந்தவர் வெள்ளை தாமரை நடிகை தமன்னா.இவர் நடிப்பில் வெளியான படங்கள் குறிப்பாக பாகுபலி போன்ற படங்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றால், காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்கிற பழமொழியை பின்பற்றி, ஒரு படத்திற்கு 1.75 கோடி முதல் 2 கோடி வரை சம்பளமாக பெற்றார்.
ஸ்ரேயா சரண்:
நடிகை ஸ்ரேயா சரண், பாலிவுட் திரையுலகில் கவனம் செலுத்தி வந்ததால், இவரை கமிட் செய்ய வந்த தமிழ் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் 1.5 கோடிக்கு மேல் சம்பளத்தை கறாராக பேசினார். பாலிவுட் கைவிட்டதால், திரும்பவும் கோலிவுட் வந்தார். யாரும் கண்டுகொள்ளாததால் சைலண்டாக திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
காஜல் அகர்வால்:
தாராள கவர்ச்சியில் ரசிகர்களை ஈர்த்த காஜல் அகர்வால், தெலுகிங்கில் நடித்த படங்கள் இவருக்கு அதிகம் கை கொடுத்தது. மேலும் தமிழிலும் விஜய், போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடி சேர்ந்து நடித்து வந்ததால், 2016 ஆம் ஆண்டு 1.2 கோடி வரை சம்பளமாக பெற்றார். ஆனால் இப்போது அம்மணி 2 கோடி என்றால் தான் கதையே கேட்கிறாராம்.
நடிகை திரிஷா:
10 வருடங்களுக்கு மேலாக நடித்து, பல ஹிட் படங்களை கொடுத்த நடிகை திரிஷா 2016 ஆம் ஆண்டில் சிறு சரிவை சந்தித்தார். எனவே கூடுதலாக வாங்கிய சம்பளத்தை கூட குறைத்து கொடுத்து 80 லட்சம் மட்டுமே அப்போதைக்கு சம்பளமாக பெற்றார்.
ஹன்சிகா :
பப்பி நடிகை ஹன்சிகா, முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார். அப்போதைக்கு திரிஷா வாங்கிய சம்பளத்திற்கு இணையாக 80 லட்சம் சம்பளமாக பெற்றார்.
ஸ்ருதி ஹாசன்:
தமிழ் - தெலுங்கு என மாறிமாறி நடித்து வந்த நடிகை ஸ்ருதி அப்போதைக்கு பாலிவுட் திரையுலகிலும் கவனம் செலுத்தி வந்தார். இவர் ஒரு படத்திற்கு 70 முதல் 75 லட்சம் வரை சம்பளமாக பெற்றார்.
ப்ரியாமணி:
பருத்தி வீரன் ப்ரியா மணி, தமிழை தொடர்ந்து மலையாளம் மொழிகளில் அதிக கவனம் செலுத்தி வந்தார். இவர் அப்போதைக்கு 70 முதல் 75 லட்சம் வரை சம்பளமாக பெற்றார்.
சமந்தா:
நடிகை சமந்தா அப்போதைக்கு வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் இருந்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இவருடைய வளர்ச்சி திரையுலகில் இருந்தது. 2016 ஆம் ஆண்டு ஒரு படத்திற்கு 70 லட்சம் மட்டுமே சம்பளம் வாங்கிய இவர் இப்போது 2 கோடிக்கு மேல் சம்பளமாக பெறுகிறார். குறிப்பாக திருமணத்திற்கு பின்பும் இவர் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.