ரேகா முதல் ரம்யா பாண்டியன் வரை... ஒரு நாளைக்கு மட்டும் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இவ்வளவு சம்பளமா?
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய பெண் போட்டியாளர்களின் சம்பள விவரம் குறித்த ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெவ்வேறு குணாதிசியங்கள், வெவ்வேறு துறையை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள். மொத்தம் 16 போட்டியாளர்கள் ஒரே வீட்டில் தங்க வைப்பதால் எழும் பிரச்சனைகள் எப்படி இருக்கும் என்பதை இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு தெரிந்திருக்கும்.
அப்படி விளையாடும் போட்டியாளர்களுக்கு, குறிப்பாக பெண் போட்டியாளர்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் யூகிப்பின் அடிப்படையில் வெளியாகியுள்ளது.
பழம் பெரும் நடிகை ரேகா, ஒரு நாளைக்கு மட்டும் சுமார் 1 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
சனம் ஷெட்டி, பிரபல மாடலும் நடிகையுமான இவருக்கும் ஒரு நாளைக்கு 1 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.
வயல் கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்து, வந்த வேகத்தில் வெளியேறிய பாடகி சுசித்ரா ஒரு நாளைக்கு 80 ஆயிரம் சம்பளமாக பெற்றுள்ளார்.
மற்றொரு வயல் கார்டு எண்ட்ரியான அர்ச்சனா ஒரு நாளைக்கு 75 ஆயிரம் சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது .
இடுப்பழகி ரம்யா பாண்டியனும் அர்ச்சனாவை போலவே ஒரு நாளைக்கு 75 ஆயிரம் சம்பளமாக பெற்றுகிறாராம்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது கதாநாயகி கெட்டப்புக்கு தயாராகியுள்ள கேப்ரில்லா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒரு நாளைக்கு மட்டும் 70 ஆயிரம் சம்பளமாக பெருகிறாராம்.
சீரியலில் நாயகியாக இருந்து தற்போது வெள்ளித்திரை வாய்ப்புக்கு தாயாராகி வந்த ஷிவானி ஒரு நாளைக்கு 60 ஆயிரம் சம்பளமாக பெறுகிறார் என கூறப்படுகிறது.
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறிமுகமாகி தற்போது, தொகுப்பாளர், நடிகை என வளர்ந்துகொண்டே செல்லும் நிஷா ஒரு நாளைக்கு மட்டும் 40 ஆயிரம் சம்பளமாக பெற்றுள்ளாராம்.
இவரை போலவே, மாடலும், சீரியல் நடிகையுமான சம்யுக்தாவும் 40 ஆயிரம் நாள் ஒன்றுக்கு சம்பளமாக பெற்றுள்ளாராம்.
செய்தி வாசிப்பாளராக அனிதா சம்பாதிக்கும் 40 ஆயிரம் மட்டுமே ஒரு நாளைக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம். இந்த தகவல் அதிகார பூர்வ தகவல் இல்லை என்றாலும் யூகிப்பின் அடிப்படையில் மட்டுமே வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.