MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • ஈரோட்டில் 141 கிராம உதவியாளர் வேலைகள்: 10ம் வகுப்பு போதும், ₹35,100 வரை சம்பளம்! உடனே விண்ணப்பிக்கலாம்!

ஈரோட்டில் 141 கிராம உதவியாளர் வேலைகள்: 10ம் வகுப்பு போதும், ₹35,100 வரை சம்பளம்! உடனே விண்ணப்பிக்கலாம்!

ஈரோடு மாவட்டத்தில் 141 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு. 10ம் வகுப்பு தேர்ச்சி போதும், ₹35,100 வரை சம்பளம். ஆகஸ்ட் 5, 2025க்குள் விண்ணப்பிக்கலாம். தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை அறியவும்.

2 Min read
Suresh Manthiram
Published : Jul 07 2025, 11:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
ஈரோடு மாவட்டத்தில் கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
Image Credit : stockPhoto

ஈரோடு மாவட்டத்தில் கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டம் வருவாய் அலகில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புப் பிரிவின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் பணியிடங்களுக்கு, தகுதி வாய்ந்த நபர்கள் ஜூலை 7, 2025 முதல் ஆகஸ்ட் 5, 2025 வரை விண்ணப்பிக்கலாம்.

29
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
Image Credit : pixabay

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

நிறுவனம்: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

வகை: தமிழ்நாடு அரசு வேலை

காலியிடங்கள்: 141

பணியிடம்: ஈரோடு, தமிழ்நாடு

சம்பளம்: மாதம் ₹11,100 முதல் ₹35,100 வரை

Related Articles

Related image1
2299 கிராம உதவியாளர் பணியிடங்கள்.! தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்
Related image2
சொந்த ஊரிலே வேலை! அரசு வங்கிகளில் 5208 IBPS PO காலியிடங்கள்! பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு!
39
தாலுகா வாரியான காலியிடங்கள் மற்றும் கல்வித்தகுதி
Image Credit : pixabay

தாலுகா வாரியான காலியிடங்கள் மற்றும் கல்வித்தகுதி

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு தாலுகாக்களில் கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தாலுகா வாரியாக காலியிடங்கள் எண்ணிக்கை:

பவானி – 11

பெருந்துறை – 39

கோபிசெட்டிபாளையம் – 19

மொடக்குறிச்சி – 15

கொடுமுடி – 10

ஈரோடு – 09

தாளவாடி – 01

சத்தியமங்கலம் – 07

நம்பியூர் – 16

அந்தியூர் – 14

கல்வித்தகுதி: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

49
இதர தகுதிகள் மற்றும் வயது வரம்பு
Image Credit : Getty

இதர தகுதிகள் மற்றும் வயது வரம்பு

விண்ணப்பதாரர்களுக்கு சில கூடுதல் தகுதிகள் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் அந்த வட்டத்தைச் சேர்ந்தவராகவும், அதே வட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.

தமிழில் பிழையின்றி எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அந்தக் கிராமப் பணியிடத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

59
வயது வரம்பு (07.07.2025 நிலவரப்படி):
Image Credit : social media

வயது வரம்பு (07.07.2025 நிலவரப்படி):

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர்: 21 வயது நிரம்பியவராகவும், 37 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள்: 21 வயது நிரம்பியவராகவும், 42 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

இதர வகுப்பினர்: 21 வயது நிரம்பியவராகவும், 32 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

69
தேர்வு செய்யும் முறை மற்றும் முக்கிய தேதிகள்
Image Credit : Pixabay

தேர்வு செய்யும் முறை மற்றும் முக்கிய தேதிகள்

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு, சில படிநிலைகளைக் கொண்டது.

தேர்வு செய்யும் முறை:

மிதிவண்டி / இருசக்கர வாகனம் ஓட்டும் திறன்

வாசித்தல் மற்றும் எழுதும் திறன்

நேர்காணல்

சான்றிதழ் சரிபார்ப்பு

79
முக்கிய தேதிகள்:
Image Credit : Pixabay

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.07.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.08.2025

எழுத்து தேர்வு தேதி: 05.09.2025

நேர்காணல் நடைபெறும் தேதி: 20.09.2025 முதல் 26.09.2025 வரை

89
விண்ணப்பிக்கும் முறை
Image Credit : Pixabay

விண்ணப்பிக்கும் முறை

இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

விண்ணப்பப் படிவம் மற்றும் நிபந்தனைகளை [https://erode.nic.in/] இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தினை முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைத்து, சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

99
குறிப்பு:
Image Credit : our own

குறிப்பு:

விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து தகுதிகளும் உங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved