- Home
- Career
- அப்ளை பண்ணா போதும்.. தேர்வு இல்லை.. நேர்முகத் தேர்வும் இல்லை.. பெல்லில் 760 அப்ரண்டிஸ் வேலைகள்..
அப்ளை பண்ணா போதும்.. தேர்வு இல்லை.. நேர்முகத் தேர்வும் இல்லை.. பெல்லில் 760 அப்ரண்டிஸ் வேலைகள்..
திருச்சி பெல் நிறுவனத்தில் 760 அப்ரண்டிஸ் காலியிடங்கள் அறிவிப்பு. தேர்வு கிடையாது, மெரிட் லிஸ்ட் அடிப்படையில் தேர்வு. தகுதியுடையவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

திருச்சி பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
திருச்சி பெல் (BHEL) நிறுவனம், மத்திய அரசின் ஒரு முக்கிய பொதுத்துறை நிறுவனம். தற்போது, இந்த நிறுவனம் 760 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது மத்திய அரசு வேலை என்பதால், ஏராளமான இளைஞர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு எந்த விதமான எழுத்துத் தேர்வும் கிடையாது என்பது இதன் மிக முக்கியமான அம்சம். தகுதியுடையவர்கள் உடனே விண்ணப்பித்து இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பணியிடங்களின் விவரம்: என்னென்ன பணிகள்?
மொத்தம் 760 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியான சம்பளம் மற்றும் கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
பதவி: பட்டதாரி அப்ரண்டிஸ் (Graduate Apprentice)
காலியிடங்கள்: 120
சம்பளம்: மாதம் ரூ.12,000/-
கல்வித் தகுதி: பொறியியல் / டெக்னாலஜி / வணிகவியல் (B.Com) / கலை (B.A) ஆகியவற்றில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
பதவி: டெக்னீசியன் அப்ரண்டிஸ் (Technician Apprentice)
காலியிடங்கள்: 90
சம்பளம்: மாதம் ரூ.11,000/-
கல்வித் தகுதி: டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளில் (2021-2025) முழு நேர டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
பதவி: டிரேட் அப்ரண்டிஸ் (Trade Apprentice)
காலியிடங்கள்: 550
சம்பளம்: மாதம் ரூ.11,050/-
கல்வித் தகுதி: 10-வது தேர்ச்சியுடன், NCVT / SCVT அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் ஐடிஐ படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை
இந்த அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வும் உண்டு. SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது தளர்வு அளிக்கப்படும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவிதமான கட்டணமும் இல்லை. தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
தேர்வு முறை: மெரிட் பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு இல்லாமல், அவர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண்களைப் பொறுத்து ஒரு மெரிட் பட்டியல் தயாரிக்கப்படும். பின்னர், மெரிட் பட்டியலில் இடம் பெறுபவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். இது ஒரு எளிமையான தேர்வு முறை என்பதால், தகுதியுடைவர்கள் தங்கள் விண்ணப்பத்தை விரைவாக சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.09.2025.