MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • Bank Jobs: ரூ.1.20 லட்சம் சம்பளத்தில் பொதுத்துறை வங்கியில் வேலை.! பட்டதாரிகளுக்கு செம சான்ஸ்.!

Bank Jobs: ரூ.1.20 லட்சம் சம்பளத்தில் பொதுத்துறை வங்கியில் வேலை.! பட்டதாரிகளுக்கு செம சான்ஸ்.!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் இந்தியா, 115 சிறப்பு அதிகாரி பணியிடங்களை அறிவித்துள்ளது. ஐடி துறையில் அனுபவம் வாய்ந்த பட்டதாரிகளுக்கு தலைமை மேலாளர், சீனியர் மேலாளர் போன்ற உயர் பதவிகளில் பணியாற்ற இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். 

2 Min read
Vedarethinam Ramalingam
Published : Nov 17 2025, 11:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அழைக்கிறது பேங்க் ஆப் இந்தியா
Image Credit : Gemini AI

அழைக்கிறது பேங்க் ஆப் இந்தியா

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் இந்தியா, 2025–ஆம் ஆண்டிற்கான சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐடி துறையில் அனுபவமும் திறமையும் கொண்ட நிபுணர்களை தேர்வு செய்ய இது முக்கிய வாய்ப்பாக கருதப்படுகிறது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகள் கொண்ட இந்த வங்கி, டிஜிட்டல் சேவைகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டில் வேகமாக முன்னேறி வரும் நிலையில், பல்வேறு தொழில்நுட்ப பிரிவுகளில் திறமையான ஊழியர்கள் தேவைப்படுவதாக அறிவித்துள்ளது.

24
 115 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
Image Credit : Getty

115 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 115 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தலைமை மேலாளர், சீனியர் மேலாளர் போன்ற உயர்நிலை பொறுப்புகள் இதில் அடங்கும். 

Application Maintenance, Cloud Operations, Network Management, Database Administration, Infrastructure, Digital Payments போன்ற பல்வேறு பிரிவுகளில் Head Level மற்றும் Senior Level ஐடி நிபுணர்கள் தேவைப்படுகின்றனர். அதேபோல் Cyber Security, Network Security, Project Management, API Development, ETL Development போன்ற தொழில்நுட்ப துறைகளிலும் சிறப்பு அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

ஒவ்வொரு பொறுப்பிற்கும் தனித்தனி அனுபவத் தகுதி மற்றும் கல்வித் தகுதி குறிப்பிடப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாகப் படித்து தகுதி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

Related Articles

Related image1
Jobs Alert: 10th முடித்தவர்களும் எய்ம்ஸ்- இல் பணிபுரிய வாய்ப்பு.! 1,400 பேருக்கு மத்திய அரசு பணி.! கைநிறைய சம்பளம்.!
Related image2
Jobs Alert: ஐடி துறையில் வேலை வேண்டுமா? டீசிஎஸ் அழைக்கிறது.! நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி இதுதான்.!
34
பட்டதாரிகள் கவனத்திற்கு
Image Credit : Freepik

பட்டதாரிகள் கவனத்திற்கு

இந்த பணியிடங்களுக்கு B.E/B.Tech, MCA, M.Sc போன்ற துறையினைச் சார்ந்த பட்டப்படிப்புகள் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப அனுபவம் கட்டாயமானதாகவும், சான்றிதழ்கள் (CISA/CISM/CISSP) போன்றவை சில பணியிடங்களுக்கு கூடுதல் முன்னுரிமையாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பள கட்டமைப்பில், சீனியர் மேனேஜ்மென்ட் தேர்­வானவர்களுக்கு மாதம் அதிகபட்சமாக ₹1,20,940 வரை வழங்கப்படும். அதனுடன் DA, HRA உள்ளிட்ட பல்வேறு வங்கித் தொகுப்புகளும் கிடைக்கும் என்பதால் இது உயர்ந்த ஊதிய வாய்ப்பாக கருதப்படுகிறது.

44
வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம்
Image Credit : Freepik

வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம்

வயது வரம்பு, பணியிடங்களின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும். அதிகபட்ச வயது 47 ஆண்டுகள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது தளர்வு வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் அனைவரும் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என இரண்டு நிலைகளில் நடைபெறும் தேர்வு முறையை கடந்து செல்ல வேண்டும். பொதுப் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ₹850 ஆகவும், SC/ST விண்ணப்பதாரர்களுக்கு ₹175 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி 30 நவம்பர் 2025 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதி உள்ளவர்கள், பேங்க் ஆஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் கவனமாகப் படித்து கல்வித் தகுதி, அனுபவம், பொறுப்புகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சரிபார்ப்பது அவசியம். தொழில்நுட்ப திறன்களை வங்கி துறையில் பயன்படுத்தி உயர்ந்த நிலை பதவிகளில் பணியாற்ற விரும்புகிறவர்களுக்கு இது ஒரு சிறந்த வேலைவாய்ப்பு வாய்ப்பு எனலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வேலைவாய்ப்பு
வேலை வாய்ப்பு முகாம்
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
வேலை வாய்ப்பு
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved