MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Govt Scheme: பெண்களுக்கு ஜாக்பாட்..! E-Bike வாங்க ரூ.1 லட்சம் மானியம்..! எங்கு, எப்படி விண்ணப்பிக்கனும் தெரியுமா?!

Govt Scheme: பெண்களுக்கு ஜாக்பாட்..! E-Bike வாங்க ரூ.1 லட்சம் மானியம்..! எங்கு, எப்படி விண்ணப்பிக்கனும் தெரியுமா?!

பணிபுரியும் பெண்கள், கல்லூரி மாணவிகள் மின்சார இருசக்கர வாகனம் வாங்க 75% அல்லது ரூ.1 லட்சம் வரை மானியம் பெறலாம். இந்தத் திட்டம் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதோடு, பெண்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jun 16 2026, 09:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
பெண்களின் முன்னேற்றம் குடும்பத்தின் முன்னேற்றம்
Image Credit : Getty

பெண்களின் முன்னேற்றம் குடும்பத்தின் முன்னேற்றம்

பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் புதுச்சேரி அரசு "முதல்வரின் புதுமைப் பெண் திட்டம்" என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பணிபுரியும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் மின்சார இருசக்கர வாகனம் (E-Bike / E-Scooter) வாங்குவதற்கு 75 சதவீதம் வரை அல்லது அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையிலான மானியத்தைப் பெறலாம்.

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் கல்வி மற்றும் வேலைக்காக தினசரி அதிக தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் பாதுகாப்பான மற்றும் சுயாதீனமான போக்குவரத்து வசதியை வழங்கும் நோக்கில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார வாகனங்களின் பயன்பாட்டையும் அரசு ஊக்குவித்து வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
Image Credit : Convergence India

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கப்படுகிறது. கலை, அறிவியல், தொழிற்கல்வி, டிப்ளமோ மற்றும் ஐடிஐ போன்ற படிப்புகளைத் தொடரும் மாணவிகள் இதன் மூலம் பயனடைய முடியும்.

மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் பணிபுரியும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இ-பைக் வாங்குவதற்கான செலவில் 75% வரை அல்லது அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

இதனுடன் இணைந்து செயல்படும் "மண்ணின் மகள்" திட்டத்தின் கீழ் ரூ.25,000 மானியத்துடன் திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் பெண்கள் தொழில் திறன்களை வளர்த்துக்கொண்டு தங்களது பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

Related Articles

Related image1
Govt Scheme: அரசு தரும் ரூ.4,000 உதவித்தொகை... முதலில் இந்த சான்றிதழை வாங்குங்கள்!
Related image2
Now Playing
Govt Scheme: தொழில் தொடங்க ரூ.30 லட்சம் கடன் பெறலாம் ஈசியா.! தகுதிகள் மற்றும் விண்ணப்ப விவரங்கள் இதோ
36
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Image Credit : our own

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் சில தகுதிகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

  • விண்ணப்பதாரர் பட்டியல் இனத்தவர் (SC) அல்லது பழங்குடியினர் (ST) சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். 
  • புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் குறைந்தது 5 ஆண்டுகள் தொடர்ந்து வசித்திருக்க வேண்டும். 
  • வயது 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். 
  • குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். செல்லுபடியாகும் இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் (MC-WOG / MC-WG) கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

அதே நேரத்தில் அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் மற்றும் வங்கிகளில் பணிபுரியும் பெண்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது.

46
தேவையான ஆவணங்கள்
Image Credit : our own

தேவையான ஆவணங்கள்

விண்ணப்பிக்கும் போது பிறப்புச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனத்தின் அசல் விலைப்பட்டியல் ஆகியவை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

பணிபுரியும் பெண்கள் EPF/ESI அட்டை, சம்பளச் சீட்டு அல்லது இ-ஷ்ராம் அட்டையையும் இணைக்க வேண்டும். மாணவிகள் கல்லூரி போனாஃபைட் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

56
விண்ணப்பிக்கும் முறை
Image Credit : Google

விண்ணப்பிக்கும் முறை

இந்த திட்டத்திற்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரு வழிகளிலும் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் புதுச்சேரி அரசின் e-District இணையதளத்தில் பதிவு செய்து "Mudhalvarin Pudhumai Penn Scheme for e-Scooter Subsidy" என்ற இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகங்களில் இலவச விண்ணப்பப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

66
மானியம் எப்படி கிடைக்கும்?
Image Credit : our own

மானியம் எப்படி கிடைக்கும்?

விண்ணப்பங்கள் அனைத்தும் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு, "முதலில் விண்ணப்பிப்போருக்கு முன்னுரிமை" என்ற அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். வாகனத்தை வாங்கிய பிறகு அதன் அசல் இன்வாய்ஸை சமர்ப்பித்தவுடன் மானியத் தொகை நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கில் DBT முறையில் செலுத்தப்படும்.

எனினும், மானியம் பெற்ற வாகனத்தை வாங்கிய 5 ஆண்டுகளுக்குள் வேறு யாருக்கும் விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுயசார்பு வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம், புதுச்சேரி பெண்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது. ரூ.1 லட்சம் வரை மானியம் கிடைக்கும் இந்த அரிய வாய்ப்பை தகுதியுள்ள பெண்கள் மற்றும் மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
பெண்கள்
பெண் அதிகாரம்
புதுச்சேரி
தமிழ்நாடு அரசு
அரசியல்
ஏசியாநெட் நியூஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
RBI Action: ஆர்பிஐ அதிரடி: 3 நிதி நிறுவனங்களுக்கு அபராதம்.. ஒரு வங்கிக்கு தடை!
Recommended image2
Business Ideas for Women: வீட்டிலிருந்தே பிசினஸ் செய்ய ஆசையா?! மாதம் ரூ.50,000 சம்பாதிக்க உதவும் 5 சிறந்த பிசினஸ் ஐடியாக்கள்!
Recommended image3
Now Playing
Petrol Price : முடிவுக்கு வந்த அமெரிக்க-ஈரான் போர்! பெட்ரோல்-டீசல் விலை குறையுமா?
Related Stories
Recommended image1
Govt Scheme: அரசு தரும் ரூ.4,000 உதவித்தொகை... முதலில் இந்த சான்றிதழை வாங்குங்கள்!
Recommended image2
Now Playing
Govt Scheme: தொழில் தொடங்க ரூ.30 லட்சம் கடன் பெறலாம் ஈசியா.! தகுதிகள் மற்றும் விண்ணப்ப விவரங்கள் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved