MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • RBI Action: ஆர்பிஐ அதிரடி: 3 நிதி நிறுவனங்களுக்கு அபராதம்.. ஒரு வங்கிக்கு தடை!

RBI Action: ஆர்பிஐ அதிரடி: 3 நிதி நிறுவனங்களுக்கு அபராதம்.. ஒரு வங்கிக்கு தடை!

RBI Action: விதிமுறைகளை மீறிய மூன்று நிதி நிறுவனங்கள் மீது ஆர்பிஐ அபராதம் விதித்துள்ளதுடன், ஒரு கூட்டுறவு வங்கிக்கு ஆறு மாத கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : Jun 16 2026, 08:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஆர்பிஐ மீண்டும் அதிரடி
Image Credit : Google

ஆர்பிஐ மீண்டும் அதிரடி

நிதி துறையில் ஒழுங்குமுறைகளை உறுதிப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மூன்று நிதி நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மும்பையைச் சேர்ந்த மொகவீர் கூட்டுறவு வங்கிக்கு ஆறு மாத காலத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை, வங்கியின் நிதி திரவத்தன்மை நிலையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
வங்கிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்ன?
Image Credit : our own

வங்கிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்ன?

ஜூன் 12 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த உத்தரவின்படி, மொகவீர் கூட்டுறவு வங்கி புதிய கடன்களை வழங்கவோ, ஏற்கனவே உள்ள கடன்களை புதுப்பிக்கவோ முடியாது. சமரச ஒப்பந்தங்களில் ஈடுபடுவதற்கும் அனுமதி இல்லை. இருப்பினும், இது வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டதாக கருதப்படாது என்றும், ஆறு மாதங்களுக்குப் பிறகு நிலைமையை ஆய்வு செய்து அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என்றும் ஆர்பிஐ விளக்கியுள்ளது.

Related Articles

Related image1
Business Ideas for Women: வீட்டிலிருந்தே பிசினஸ் செய்ய ஆசையா?! மாதம் ரூ.50,000 சம்பாதிக்க உதவும் 5 சிறந்த பிசினஸ் ஐடியாக்கள்!
Related image2
Now Playing
Petrol Price : முடிவுக்கு வந்த அமெரிக்க-ஈரான் போர்! பெட்ரோல்-டீசல் விலை குறையுமா?
34
வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?
Image Credit : our own

வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

இந்த அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் மத்தியில் கவலை ஏற்பட்டாலும், அவர்களின் வைப்பு தொகைகளுக்கு சில பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்களது கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் வரை பணத்தை எடுக்கலாம். மேலும், ஊழியர் சம்பளம், வாடகை, மின்சார கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளுக்கும் குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

44
ரூ.5 லட்சம் வரை காப்பீட்டு பாதுகாப்பு
Image Credit : our own

ரூ.5 லட்சம் வரை காப்பீட்டு பாதுகாப்பு

டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷன் (DICGC) விதிகளின்படி, ஒவ்வொரு வைப்புதாரருக்கும் ரூ.5 லட்சம் வரை வைப்பு காப்பீட்டு பாதுகாப்பு கிடைக்கும். இதனால், வாடிக்கையாளர்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்றாலும், ஆர்பிஐ வெளியிடும் அடுத்தடுத்த அறிவிப்புகளை தொடர்ந்து கவனிப்பது அவசியம். நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை வலியுறுத்தும் நடவடிக்கையாக இந்த முடிவு பார்க்கப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வங்கி
வங்கிக் கணக்கு
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Business Ideas for Women: வீட்டிலிருந்தே பிசினஸ் செய்ய ஆசையா?! மாதம் ரூ.50,000 சம்பாதிக்க உதவும் 5 சிறந்த பிசினஸ் ஐடியாக்கள்!
Recommended image2
Now Playing
Petrol Price : முடிவுக்கு வந்த அமெரிக்க-ஈரான் போர்! பெட்ரோல்-டீசல் விலை குறையுமா?
Recommended image3
Gold Loan: அடகு வைத்த நகையை மீட்கலாம் ஈஸியா! உங்கள் நகையை ஏலத்திற்கு விடாமல் தடுப்பது எப்படி?
Related Stories
Recommended image1
Business Ideas for Women: வீட்டிலிருந்தே பிசினஸ் செய்ய ஆசையா?! மாதம் ரூ.50,000 சம்பாதிக்க உதவும் 5 சிறந்த பிசினஸ் ஐடியாக்கள்!
Recommended image2
Now Playing
Petrol Price : முடிவுக்கு வந்த அமெரிக்க-ஈரான் போர்! பெட்ரோல்-டீசல் விலை குறையுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved