MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ஜியோ IPO வருகை; முதலீட்டாளர்களுக்கு புதிய அதிரடி அறிவிப்பு!

ஜியோ IPO வருகை; முதலீட்டாளர்களுக்கு புதிய அதிரடி அறிவிப்பு!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 48வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் ஜியோவின் IPO அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜியோ தனது IPO (Initial Public Offering) க்கான தயாரிப்புகளைத் தொடங்கியுள்ளது.

1 Min read
Raghupati R
Published : Aug 29 2025, 04:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
ஜியோ ஐபிஓ
Image Credit : Pinterest

ஜியோ ஐபிஓ

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 48வது ஆண்டு பொதுக்கூட்டம் ஆகஸ்ட் 29, 2025 அன்று நடந்தது. நீண்ட நாட்களாக முதலீட்டாளர்கள் எதிர்பார்த்திருந்த முக்கிய அறிவிப்பை அந்நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி வெளியிட்டார். ஜியோ தனது IPO (Initial Public Offering) க்கான தயாரிப்புகளைத் தொடங்கியுள்ளது. 

2026 முதல் பாதியிலேயே பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் இலக்கு வைக்கப்பட்டுள்ளது அவர் தெரிவித்தார். முகேஷ் அம்பானி, “ஐபிஓ மூலம் ஜியோ உலகளாவிய தரத்தில் மதிப்பை உருவாக்கும் திறன் கொண்ட நிறுவனம் என்பதை நிரூபிக்கிறது. வாய்ப்பு” எனக் குறிப்பிட்டார். இதனால் முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

23
ஜியோ பங்கு சந்தை
Image Credit : Google

ஜியோ பங்கு சந்தை

ஜியோவில் மெட்டா, கூகிள் போன்ற முன்னணி சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏற்கனவே 20 பில்லியன் டாலருக்கு மேல் முதலீடு செய்துள்ளன. தற்போது 500 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன் இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக திகழ்கிறது. சமீபத்தில் ஜியோ மற்றும் SpaceX (Starlink) இணைந்து செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. 

ஜியோவின் எதிர்காலக் கனவு இந்தியாவின் ஒவ்வொரு வீட்டுக்கும் டிஜிட்டல் சேவைகளை விரிவுபடுத்துவதே. மொபைல், பிராட்பேண்ட் இணைப்புகளை அனைவருக்கும் அடையச் செய்வதோடு, வணிகத் துறையையும் முழுமையாக டிஜிட்டல் தளத்திற்கு கொண்டு செல்லும் திட்டத்தில் செயல்படுகிறது.

Related Articles

Related image1
ஜியோ, ஏர்டெல்லை தூக்கி சாப்பிடும் பிஎஸ்என்எல்! கம்மி விலையில் டேட்டா + 30 நாள் வேலிட்டி! சூப்பர் பிளான்!
Related image2
50 ஜிபி டேட்டா இலவசம்.. ஜியோ, விஐ யூசர்களுக்கு அடித்த ஜாக்பாட்
33
ரிலையன்ஸ் ஜியோ
Image Credit : Pinterest

ரிலையன்ஸ் ஜியோ

‘AI for everyone, Everywhere’ என்ற முயற்சியை ஊக்குவித்து, உலகளாவிய அளவிலும் விரிவடைய இலக்கு வைத்துள்ளது. 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) ஜியோவின் செயல்திறன் வலுவாக இருந்தது. நிறுவனம் ரூ.7,110 கோடி நிகர லாபம் ஈட்டியது. வருவாய் ரூ.41,054 கோடியாக 19% உயர்ந்தது. சராசரி பயனர் வருமானம் ரூ.208.8 ஆக உயர்ந்தது. 

5G பயனர் தளம் 200 மில்லியனைத் தாண்டியது. வீட்டு பிராட்பேண்ட் இணைப்புகளும் 20 மில்லியனை கடந்தன. இலவச குரல் அழைப்புகள், டிஜிட்டல் பரிவர்த்தனைகள், ஸ்டார்ட்-அப் சூழல் மற்றும் AI வளர்ச்சி போன்ற மைல்கற்கள் ஜியோவை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளன.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ
முதலீடு
தனிநபர் நிதி
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved