MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • வீட்டில் இருந்தபடியே ரூ.5 லட்சத்திற்கு மேல் சம்பாதிக்கலாம்.. இந்த போஸ்ட் ஆபிஸ் திட்டம் பற்றி தெரியுமா?

வீட்டில் இருந்தபடியே ரூ.5 லட்சத்திற்கு மேல் சம்பாதிக்கலாம்.. இந்த போஸ்ட் ஆபிஸ் திட்டம் பற்றி தெரியுமா?

2024ல் நீங்கள் டெபாசிட் செய்த பணம் பாதுகாப்பாக இருக்கவும், ழக்கமான வருமானத்தைப் பெறும் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால், போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர சேமிப்புத் திட்டம் (Post Office Monthly Income Scheme) சிறந்த தேர்வாகும்..

2 Min read
Ramya s
Published : Jan 13 2024, 04:11 PM IST| Updated : Jan 13 2024, 04:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
PPF, SCSS and Post Office Savings Account Govt Eases Rules; Know What Has Changed

PPF, SCSS and Post Office Savings Account- Govt Eases Rules; Know What Has Changed

நடுத்தர மக்கள் பணத்தை சேமித்து வைக்க தபால் நிலையம் மூலம் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 2024ல் நீங்கள் டெபாசிட் செய்த பணம் பாதுகாப்பாக இருக்கவும், ழக்கமான வருமானத்தைப் பெறும் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால், போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர சேமிப்புத் திட்டம் (Post Office Monthly Income Scheme) சிறந்த தேர்வாகும்.. இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

28

இந்த திட்டத்தின் சிறந்த விஷயம் என்னவென்றால், நீங்கள் எந்த தொகையை முதலீடு செய்தாலும், அது முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். தவிர, ஒவ்வொரு மாதமும் உங்கள் முதலீட்டின் மீதான வட்டியை நீங்கள் சம்பாதிக்க முடியும்..

38

அஞ்சல் அலுவலக MIS கணக்கை ஒற்றை மற்றும் கூட்டு இரண்டிலும் திறக்கலாம். இந்தக் கணக்கை நீங்கள் உங்கள் மனைவி, சகோதரர் அல்லது குடும்ப உறுப்பினருடன் கூட்டாகத் தொடங்கினால், உங்களுக்கான டெபாசிட் வரம்பும் அதிகரிக்கும். இதன் மூலம் உங்களுக்கு அதிக பலன் கிடைக்கும். அந்த வகையில், இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் ரூ.5,55,000 வீட்டில் உட்கார்ந்து சம்பாதிக்கலாம். 

48

ஒவ்வொரு மாதமும் வட்டி மூலம் சம்பாதிக்கலாம்

தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டம் ஒரு வைப்புத் திட்டமாகும். இதில், மொத்தமாக ஒரு தொகையை நீங்கள் டெபாசிட் செய்ய வேண்டும். பின்னர் அதற்கான வட்டி ஒவ்வொரு மாதமும் தபால் அலுவலக சேமிப்புக் கணக்கில் செலுத்தப்படும்.. 5 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் உங்கள் டெபாசிட் தொகையை திரும்பப் பெறலாம். திட்டத்தின் பலன்களை நீங்கள் மேலும் பெற விரும்பினால், முதிர்ச்சியடைந்த பிறகு புதிய கணக்கைத் திறக்கலாம்.

58

ஒற்றை மற்றும் கூட்டு கணக்கு

இந்தத் திட்டத்தில் நீங்கள் ஒற்றை மற்றும் கூட்டுக் கணக்கைத் தொடங்கலாம். இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்து கூட்டுக் கணக்கைத் தொடங்கலாம். ஒற்றை கணக்கில் ரூ.9 லட்சம் வரையிலும், கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம் வரையிலும் டெபாசிட் செய்யலாம். அதிக டெபாசிட் இருந்தால், வருமானமும் அதிகமாக இருக்கும்.எனவே நீங்களும் உங்கள் துணையுடன் சேர்ந்து இந்தக் கணக்கைத் தொடங்கினால், வட்டியில் மட்டும் ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் கிடைக்கும்

68
Post office savings scheme

Post office savings scheme

.ரூ.5,55,000 சம்பாதிப்பது எப்படி? 

தற்போது தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில் 7.4 சதவீத வட்டி கிடைக்கிறது. இதில் உங்கள் மனைவியுடன் சேர்த்து ரூ.15 லட்சத்தை டெபாசிட் செய்தால், ஒவ்வொரு மாதமும் 7.4 சதவீத வட்டியில் ரூ.9,250 வருமானம் கிடைக்கும். அதன்படி ஒரு வருடத்தில் ரூ.1,11,000 உத்தரவாத வருமானம் இருக்கும். 1,11,000 x 5 = 5,55,000 இப்படி, 5 ஆண்டுகளில் இருவரும் 5,55,000 ரூபாய் மட்டுமே வட்டியில் சம்பாதிக்கலாம்..

78

அதேசமயம், இந்தக் கணக்கை ஒரே கணக்காகத் தொடங்கினால், அதிகபட்சமாக ரூ.9 லட்சத்தை டெபாசிட் செய்யலாம். இதில், ஒவ்வொரு மாதமும் 5,550 ரூபாய் வட்டி கிடைக்கும். இதன் மூலம் ஓராண்டில் ரூ.66,600 வட்டியாக எடுத்துக் கொண்டு 5 ஆண்டுகளில் ரூ.3,33,000 வட்டி மூலம் மட்டுமே சம்பாதிக்க முடியும்.

88

யார் கணக்கைத் திறக்கலாம் ?

இந்திய நாட்டின் குடிமகன் எவரும் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில் கணக்கைத் தொடங்கலாம். குழந்தையின் பெயரிலும் கணக்கு தொடங்கலாம். குழந்தை 10 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், அவரது பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் அவரது பெயரில் கணக்கைத் தொடங்கலாம். குழந்தைக்கு 10 வயதாகும்போது, கணக்கை அவரே இயக்கும் உரிமையைப் பெறலாம். MIS கணக்கிற்கு, நீங்கள் தபால் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்கிறோம். அடையாளச் சான்றுக்கு ஆதார் அட்டை, பான் கார்டு வழங்குவது கட்டாயம்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
தபால் அலுவலகத் திட்டம்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved