இனி ரூ.50,000 மட்டும் எடுக்க முடியும்.. ஏடிஎம் லிமிட் குறைப்பு.. எந்த வங்கி?
குறிப்பிட்ட வங்கி ஒன்று டெபிட் கார்டுகளுக்கான தினசரி ஏடிஎம் பணம் எடுக்கும் வரம்பைக் குறைத்துள்ளது. இந்த புதிய விதிகள் 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும், இதன்படி சில கார்டுகளின் வரம்பு ரூ.50,000 மற்றும் ரூ.75,000 ஆக மாற்றப்பட்டுள்ளது.

டெபிட் கார்டு பணம் எடுக்கும் வரம்பு
பலர் தினசரி பண தேவைகளுக்காக டெபிட் கார்டை பயன்படுத்தி ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கிறார்கள். ஆனால் சமீபத்தில் ஒரு பெரிய பொதுத்துறை வங்கி தனது டெபிட் கார்டு விதிகளில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சில வாடிக்கையாளர்கள் முன்பு போல அதிக தொகையை ஏடிஎம்-ல் இருந்து எடுக்க முடியாத நிலை உருவாகிறது. புதிய விதிகளின்படி, குறிப்பிட்ட சில டெபிட் கார்டுகளுக்கு தினசரி பணம் எடுக்கும் வரம்பு குறைக்கப்பட்டுள்ளது.
டெபிட் கார்டு லிமிட் மாற்றம்
இந்த மாற்றத்தை அறிவித்தது பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank – பிஎன்பி) ஆகும். வாடிக்கையாளர்களின் பாதுகாப்பையும், மோசடி அபாயங்களையும் குறைப்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. புதிய விதிகள் 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும். முன்பு சில கார்டுகளில் தினசரி ரூ.1 லட்சம் வரை பணம் எடுக்க முடிந்த நிலையில், இப்போது அந்த வரம்பு ரூ.50,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.1.5 லட்சம் வரை இருந்த வரம்பு ரூ.75,000 ஆக மாற்றப்பட்டுள்ளது.
ரூ.50,000 வரை மட்டும் பணம் எடுக்க முடியும் கார்டுகள்:
- ரூபே NCMC பிளாட்டினம் உள்நாட்டு டெபிட் கார்டு
- ரூபே NCMC பிளாட்டினம் சர்வதேச டெபிட் கார்டு
- ரூபே பெண்கள் பவர் பிளாட்டினம் டெபிட் கார்டு
- ரூபே பிஎன்பி பலாஷ் டெபிட் கார்டு
- ரூபே பிசினஸ் பிளாட்டினம் என்சிஎம்சி டெபிட் கார்டு
- மாஸ்டர்கார்டு பிளாட்டினம் டெபிட் கார்டு
- விசா கோல்ட் டெபிட் கார்டு
- பிஎன்பி மாஸ்டர்கார்டு பிளாட்டினம் ரைஸ் டெபிட் கார்டு.
ரூ.75,000 வரை பணம் எடுக்க அனுமதி உள்ள கார்டுகள்:
- ரூபே டெபிட் கார்டைத் தேர்ந்தெடுக்கவும்
- பிஎன்பி ரூபே தேர்வு நியோ
- பிஎன்பி ரூபே எக்செல் தேர்ந்தெடுக்கவும்
- விசா கையொப்ப டெபிட் கார்டு
- மாஸ்டர்கார்டு வணிக டெபிட் கார்டு.
பிஎன்பி வங்கி வாடிக்கையாளர்கள்
இந்நிலையில், வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட் கார்டு ஏடிஎம் லிமிட்டை மாற்ற வேண்டும், இணைய வங்கி அல்லது பிஎன்பிOne மொபைல் ஆப் மூலம் எளிதாக மாற்றிக்கொள்ளலாம். அதற்காக “மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள்” பகுதியில் உள்ள டெபிட் கார்டு தனிப்பயனாக்கம் விருப்பத்தை தேர்வு செய்து புதிய லிமிட்டை பதிவு செய்ய வேண்டும். ஓடிபி மூலம் சரிபார்த்த பிறகு மாற்றம் உறுதி செய்யப்படும்.
மேலும் இந்த மாற்றம் எல்லா டெபிட் கார்டுகளுக்கும் பொருந்தாது என்றும் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. பட்டியலில் இல்லாத கார்டுகளுக்கு பழைய ஏடிஎம் பணம் எடுக்கும் வரம்பே தொடரும். மேலும் POS மெஷின், ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் தொடர்பு இல்லாத கட்டணங்கள் போன்ற பரிவர்த்தனைகளில் எந்த மாற்றமும் இல்லை என்று பிஎன்பி தெரிவித்துள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

