ரூ.15,000 வரை.. வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் சொன்ன ஆர்பிஐ.. என்ன விஷயம்?
ரிசர்வ் வங்கியின் புதிய இ-ஆணை விதிகளால், ஆட்டோ டெபிட் முறையில் முக்கிய மாற்றங்கள் வந்துள்ளன. மேலும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 24 மணி நேரத்திற்கு முன் அறிவிப்பு அனுப்பப்படும். ரிசர்வ் வங்கியின் விதிகள் குறித்து காண்போம்.

ரிசர்வ் வங்கி அறிவிப்பு
வங்கி கணக்கில் திடீரென பணம் கழிந்தது என்ற பதட்டம் இனி குறையப் போகிறது. ரிசர்வ் வங்கியின் புதிய இ-ஆணை விதிகளை அமல்படுத்தியதால், ஆட்டோ டெபிட் முறையில் பெரிய மாற்றம் வந்துள்ளது. இஎம்ஐ, இன்சூரன்ஸ், ஓடிடி சந்தா போன்ற கட்டணங்கள் மாதந்தோறும் தானாக கழிக்கப்படும் நிலையில், இப்போது பயனாளிகளுக்கே அதிக கட்டுப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.
வங்கி கணக்கு
புதிய விதிகளின்படி, எந்த தானியங்கு கட்டணமும் தொடங்குவதற்கு முன் ஒரு முறை பதிவு அவசியம். அதோடு கூடுதல் அங்கீகார முறையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், உங்கள் அனுமதி இல்லாமல் எந்த நிறுவனமும் உங்கள் கணக்கில் இருந்து பணம் கழிக்க முடியாது என்பதில் உறுதி கிடைக்கும்.
ஆட்டோ-டெபிட்
இந்த மாற்றங்களில் முக்கியமானது, ஒவ்வொரு ஆட்டோ-டெபிட் 24 மணி நேரத்திற்கு முன் அறிவிப்பு அனுப்பப்பட வேண்டும். அந்த எச்சரிக்கை நிறுவனம் பெயர், தொகை, தேதி போன்ற முழு விவரங்களும் இருக்கும். ஏதேனும் தவறு அல்லது சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனை இருந்தால், அதை உடனே நிறுத்தும் வாய்ப்பும் கிடைக்கும்.
ரூ.15,000 வரை
மேலும், ரூ.15,000 வரை உள்ள ஆட்டோ பேமெண்ட்டுகளுக்கு ஓடிபி தேவையில்லை என்று ஆர்பிஐ புதிய வரம்பை நிர்ணயித்துள்ளது. அதே நேரத்தில், இன்சூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்டுகள், கிரெடிட் கார்டு பில் போன்ற முக்கிய கட்டணங்களுக்கு இந்த வரம்பு ரூ.1 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சிறிய மற்றும் பெரிய கட்டணங்கள் இரண்டும் எளிதாக நடைபெறும்.
ஆட்டோ டெபிட் விதிகள்
இந்த விதிகள் மூலம், பயனாளிகள் எப்போது வேண்டுமானாலும் தங்கள் இ- மேன்டேட்டை மாற்றவோ அல்லது ரத்து செய்யவோ முடியும். கூடவே, உங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மாற்றப்பட்டாலும் தானாக பணம் செலுத்துதல் தொடர்ந்து செயல்படும். ஓடிடி, பிற பில்கள், இஎம்ஐ போன்ற பல சேவைகள் இதில் அடங்கும். ஆனால் பாஸ்டேக் ஆட்டோ ரீசார்ஜுக்கு இந்த விதிகள் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

