- Home
- Business
- New Train: திருப்பதி, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம்.. 3 புண்ணிய தலங்களை இணைக்கும் புதிய ரயில் வந்தாச்சு!
New Train: திருப்பதி, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம்.. 3 புண்ணிய தலங்களை இணைக்கும் புதிய ரயில் வந்தாச்சு!
New Special Train: ஒரே பயணத்தில் திருப்பதி, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் ஆகிய மூன்று முக்கிய புண்ணிய தலங்களுக்கும் செல்லும் வசதி இருந்தால் எப்படி இருக்கும்? பக்தர்களின் இந்த தேவையை கருத்தில் கொண்டு புதிய சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சிறப்பு ரயில்
தென் இந்தியாவின் முக்கிய ஆன்மிக தலங்களான திருப்பதி, திருவண்ணாமலை மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களுக்கு பயணம் செய்யும் பக்தர்களுக்கு புதிய ரயில் சேவை அறிமுகமாகியுள்ளது. தென் மத்திய ரயில்வே சார்பில் செர்லப்பள்ளி (Cherlapalli) - திருச்சிராப்பள்ளி இடையே வாரந்தோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் ஜூலை 7 முதல் சேவையைத் தொடங்குகிறது.
திருப்பதி ரயில்
இந்த புதிய ரயில், குறிப்பாக ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திருப்பதி மற்றும் திருவண்ணாமலை செல்லும் பக்தர்களுக்கு கூடுதல் இணைப்பை வழங்கும் வகையில் இயக்கப்படுகிறது. திருச்சிராப்பள்ளி செல்லும் பயணிகளுக்கும் இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும். 17077 என்ற எண்ணைக் கொண்ட சிறப்பு ரயில், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மாலை 5.20 மணிக்கு செர்லப்பள்ளியில் இருந்து புறப்படும்.
தினமும் ரூ.50 மட்டுமே.. சொளையா ரூ.30 லட்சம் கிடைக்கும்.. அடேங்கப்பா!
திருவண்ணாமலை ரயில்
மறுநாள் காலை 8.50 மணிக்கு திருப்பதி, பிற்பகல் 1.20 மணிக்கு திருவண்ணாமலை, மாலை 4.30 மணிக்கு ஸ்ரீரங்கம் மற்றும் 6.45 மணிக்கு திருச்சிராப்பள்ளி சென்றடையும். திரும்பும் பயணத்தில் 17078 என்ற ரயில், ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 9.30 மணிக்கு திருச்சிராப்பள்ளியில் இருந்து புறப்படும். அதே நாள் 9.52 மணிக்கு ஸ்ரீரங்கம், மறுநாள் அதிகாலை 1.28 மணிக்கு திருவண்ணாமலை, காலை 7.05 மணிக்கு திருப்பதி மற்றும் இரவு 10.20 மணிக்கு செர்லப்பள்ளி சென்றடையும்.
ஸ்ரீரங்கம் ரயில்
இந்த சிறப்பு ரயிலில் 3 இரண்டாம் ஏசி (2AC) பெட்டிகள், 5 மூன்றாம் ஏசி (3AC) பெட்டிகள், 10 ஸ்லீப்பர் பெட்டிகள் மற்றும் 4 பொதுப் பெட்டிகள் இடம்பெற்றுள்ளன. பல்வேறு வகை பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு இந்த பெட்டி அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கான ரயில்
ஏற்கனவே ஹைதராபாத் மற்றும் திருப்பதி இடையே தினசரி மற்றும் வாராந்திர சேவைகள் மூலம் சுமார் 20 நேரடி ரயில்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், நாராயணாத்ரி எக்ஸ்பிரஸ், வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ், ராயலசீமா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் குறிப்பிடத்தக்கவை. ஆனால் ஹைதராபாத் மற்றும் திருவண்ணாமலை இடையே தினசரி நேரடி ரயில் சேவை இல்லாத நிலையில், இந்த புதிய வாராந்திர சிறப்பு ரயில் பக்தர்களுக்கு கூடுதல் வசதியை ஏற்படுத்துகிறது.
வாராந்திர சிறப்பு ரயில்
பக்தர்கள் இந்த சேவையின் நேர அட்டவணை மற்றும் இருக்கை கிடைப்பை முன்கூட்டியே சரிபார்த்து பயணத்தைத் திட்டமிடுவது சிறந்தது. குறிப்பாக விடுமுறை மற்றும் திருவிழா காலங்களில் முன்பதிவு செய்வது சிரமமின்றி பயணிக்க உதவும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

