MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • வெறும் 4% வட்டியில் 10 லட்சம் ரூபாய் வரை கடன்.! அள்ளிக்கொடுக்கும் அரசு- குஷியில் பொதுமக்கள்

வெறும் 4% வட்டியில் 10 லட்சம் ரூபாய் வரை கடன்.! அள்ளிக்கொடுக்கும் அரசு- குஷியில் பொதுமக்கள்

சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்கப்படுகிறது. TAMCO மூலம் வழங்கப்படும் இந்தக் கடன், மூலப்பொருட்கள், உபகரணங்கள் வாங்க உதவும்.

2 Min read
Ajmal Khan
Published : Aug 22 2025, 08:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழக அரசின் கடன் உதவி திட்டம்
Image Credit : Google

தமிழக அரசின் கடன் உதவி திட்டம்

மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக பல்வேறு கடன் உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்கள் சொந்தமாக முன்னேற பல்வேறு கடன் உதவி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதே போல மானிய கடன் உதவி திட்டம், வட்டி தள்ளுபடி திட்டம் என பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. 

இந்ந நிலையில் ரொம்ப ரொம்ப குறைந்த வட்டியில் 10 லட்சம் ரூபாய் வரை கடன் உதவி திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சொந்த தொழில் செய்யும் கைவினை கலைஞர்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது.

24
10 லட்சம் ரூபாய் கடன் உதவி திட்டம்
Image Credit : Asianet News

10 லட்சம் ரூபாய் கடன் உதவி திட்டம்

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்(TAMCO) சார்பில் விராசத் கைவினை கலைஞர் கடன் திட்டம் வழங்கப்படுகிறது. இக்கடன் கைவினை கலைஞர்களின் மூலதன தேவையைப் பூர்த்தி செய்வதற்காக குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது. 

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு குறைந்த வட்டி விகிதத்தில் மூலப்பொருட்கள், உபகரணங்கள், கருவிகள் மற்றும் இயந்திரங்கள் வாங்குதவற்கான இக்கடன் வழங்கப்படுகிறது.

Related Articles

Related image1
90% பொருட்களின் விலை குறையப் போகுது! ஜிஎஸ்டி-யில் அதிரடி மாற்றம் வருது!
Related image2
ஒரு பைசா கூட குறையாது! ரயிலில் பதிவு செய்த டிக்கெட்டை கேன்சல் செய்தால் முழு பணத்தையும் பெறுவது எப்படி?
34
கடன் பெற தகுதிகள்
Image Credit : our own

கடன் பெற தகுதிகள்

தகுதிகள் :

1. விண்ணப்பதாரர் மதவழி சிறுபான்மை இனத்தவரான இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தவர்கள், பார்சிகள், ஜெயினர்கள் ஆகியோர்களில் ஒருவராக இருத்தல் வேண்டும்.

2. விண்ணப்பதார் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.

3. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் கடன் வழங்கப்படும்.

அளிக்கப்படவேண்டிய ஆவணங்கள்:

விண்ணப்பத்தாரர்கள் தங்களது விண்ணப்பங்களை கீழ்கண்ட ஆவணங்களின் நகலுடன் அந்தந்த | மாவட்டபிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலஅலுவலகம் (மாவட்ட ஆட்சியர் அலுவலகம்)/மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் / கூட்டுறவு வங்கிகளில் சமர்பிக்க வேண்டும்.

1. சிறுபான்மையினர் மதச்சான்றிதழ்.

2. சாதி சான்றிதழ்.

3. வருமான சான்றிதழ்.

4. உணவுபங்கீடு அட்டை (அ) இருப்பிட சான்றிதழ்.

5. ஆதார் அட்டை.

6. திட்ட அறிக்கை.

7. வங்கிகள் கோரும் தேவையான ஆவணங்கள்.

44
கடன் பெற விண்ணப்பிப்பது எப்படி.?
Image Credit : tndipr

கடன் பெற விண்ணப்பிப்பது எப்படி.?

விண்ணப்பிக்கும் முறை:

கடன் விண்ணப்ப படிவங்கள் பின்வரும் அலுவலகங்களில் கிடைக்கும்.

1. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம்/மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகம்.

2. மண்டல கூட்டுறவுசங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகங்கள்.

3. மாவட்ட / மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லதுதொடக்கவேளாண்மைகூட்டுறவு வங்கி.

அளவீடுகள்

திட்டம்-1 

கீழ் ஆண்டு வருமானம் ரூ. 3,00,000/-க்கு மிகாது இருத்தல் வேண்டும். (கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம்) அதிகபட்ச கடன் தொகையாக ரூ.10.00 இலட்சம் வரை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஆண்டுகளுக்கு ஆண்டிற்கு வட்டி விகிதமாக5 % பெண்களுக்கு ஆண்டிற்கு 4 % வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. கடன் தொகையை அதிகபட்சமாக 5 ஆண்டுகள் திருப்பி செலுத்தும் காலமாக உள்ளது.

திட்டம்-2

திட்டம் 1 இன் கீழ் நன்மை பெற முடியாத நபர்கள் மற்றும் ரூ.8,00,000/ வரை ஆண்டு வருமானம் கொண்டவர்கள் (கிராமபுறம் மற்றும் நகர்புறங்களுக்கு) அதிகபட்சமாக ரூ. 10.00 இலட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. ஆண்டுகளுக்கு ஆண்டிற்கு 6% வட்டியும், பெண்களுக்கு ஆண்டிற்கு 5% வட்டியுடன் கடன் வழங்கப்படுகிறது. கடனை திருப்பி செலுத்தும் காலம் 5 ஆண்டுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு
கடன்
தனிநபர் நிதி
விவசாயக் கடன்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved