MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • இந்தியாவின் 5 மர்மமான‌ ரயில் நிலையங்கள்.. இரவில் யாரும் எட்டிக்கூட பார்க்க மாட்டாங்களாம்!

இந்தியாவின் 5 மர்மமான‌ ரயில் நிலையங்கள்.. இரவில் யாரும் எட்டிக்கூட பார்க்க மாட்டாங்களாம்!

இந்தியாவில் மர்மமான 5 ரயில் நிலையங்கள் குறித்தும், இந்த ரயில் நிலையங்கள் தொடர்பாக பரப்பப்படும் அமானுஷயங்கள் குறித்தும் இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Mar 09 2026, 06:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
இந்தியாவின் மர்மமான‌ ரயில் நிலையங்கள்
Image Credit : x

இந்தியாவின் மர்மமான‌ ரயில் நிலையங்கள்

இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க்களில் ஒன்றாக உள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். நாடு முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான ரயில் நிலையங்கள் 24 மணி நேரமும் பிஸியாக உள்ளன. இந்தியாவில் பேய்க் கதைகள் அவிழ்த்து விடப்படும் மர்மமான ரயில் நிலையங்களும் இருக்கின்றன. அது குறித்து பார்க்கலாம்.

26
நைனி ரயில் நிலையம் (உத்தரப்பிரதேசம்)
Image Credit : x

நைனி ரயில் நிலையம் (உத்தரப்பிரதேசம்)

கங்கை நதிக்கு அருகில் அமைந்துள்ள நைனி ரயில் நிலையம், அமானுஷ்ய நிகழ்வுகளின் மையமாக விளங்கி வருகிறது. இந்த ரயில் நிலையங்களின் பிளாட்பாரங்களில் விசித்திரமான உருவங்கள் தென்படுவதாகவும், காரணம் புரியாத சத்தங்கள் கேட்பதாகவும் பயணிகள் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு செல்லவே பயம் வருவதாக சிலர் கூறுகின்றனர்.

Related Articles

Related image1
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி டிக்கெட் புக் செய்தால் கேஷ்பேக்.. சூப்பர் ஆஃபர்!
Related image2
பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. ரயில் டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடி.. எப்படி பெறுவது? முழு விவரம்!
36
சித்தூர் ரயில் நிலையம் (ஆந்திரப் பிரதேசம்)
Image Credit : x

சித்தூர் ரயில் நிலையம் (ஆந்திரப் பிரதேசம்)

தென்னிந்தியாவில் மர்மமாகப் பார்க்கப்படும் ரயில் நிலையங்களில் ஒன்று சித்தூர். இங்கு ரயில் விபத்தில் உயிரிழந்த ஒரு பெண்ணின் ஆவி நீதி கேட்டு அலறுவதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இரவு நேரங்களில் ரயில்வே ஊழியர்கள் தனியாக இருக்கப் பயப்படும் அளவுக்கு அங்கு பல விசித்திரமான சம்பவங்கள் பதிவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

46
பெகுன்கோடர் ரயில் நிலையம் (மேற்கு வங்கம்)
Image Credit : x

பெகுன்கோடர் ரயில் நிலையம் (மேற்கு வங்கம்)

இந்தியாவின் மிகவும் பிரபலமான 'பேய்' ரயில் நிலையம் இதுதான். வெள்ளைச் சேலை அணிந்த ஒரு பெண் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிவதாகவும், இரவில் தண்டவாளத்தில் நடந்து செல்வதாகவும் உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர். இந்த கட்டுக்கதைகளுக்கு பயந்தே ரயில் ஊழியர்கள் பலர் இங்கு வேலை செய்ய மறுத்துள்ளனர். சுமார் 42 ஆண்டுகள் இந்த நிலையம் மூடப்பட்டிருந்தது. 2009-ல் மீண்டும் திறக்கப்பட்டாலும், சூரிய மறைவிற்குப் பிறகு அங்கு செல்ல இன்றும் மக்கள் தயங்குகிறார்கள்.

56
பரோக் ரயில் நிலையம் (இமாச்சலப் பிரதேசம்)
Image Credit : x

பரோக் ரயில் நிலையம் (இமாச்சலப் பிரதேசம்)

மலைகளுக்கு நடுவே அழகாகக் காட்சியளிக்கும் இந்த நிலையம், சோகமான பின்னணியைக் கொண்டது. இந்த நிலையத்தைக் கட்டிய பொறியாளர் கர்னல் பரோக், கட்டுமானப் பணியில் ஏற்பட்ட தவறால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். அவரது ஆவி இன்னும் சுரங்கப்பாதைக்கு அருகில் உலவி வருவதாக உள்ளூர் மக்கள் நம்புகிறார்கள்.

66
லூதியானா ரயில் நிலையம் (பஞ்சாப்)
Image Credit : x

லூதியானா ரயில் நிலையம் (பஞ்சாப்)

பஞ்சாபில் உள்ள லூதியானா ரயில் நிலைய நடைமேடையில் சோகமாக இறந்த ஒரு பெண்ணின் ஆவி நடமாடுவதாக வதந்தி பரவுகிறது. நள்ளிரவு நேரங்களில் அங்கிருந்து கேட்கும் பயங்கரமான அலறல் சத்தங்களும், திடீரென மறைந்து போகும் உருவங்களும் பயணிகளையும் ஊழியர்களையும் இன்றும் அச்சத்தில் ஆழ்த்துகின்றன. இதனால் இரவில் ரயில் நிலையத்துக்கு செல்லவே மக்கள் பயப்படுகின்றனராம்.

குறிப்பு: மேற்கண்ட இந்த ரயில் நிலையங்களில் பேய், ஆவி உலவுவதாக கூறுவதே அங்குள்ள உள்ளூர் மக்களின் நம்பிக்கை மட்டும் தான். இவை ஏதும் அறிவியல்ரீதியாக நிரூப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்தியா
தொடருந்து நிலையம்
இந்திய இரயில்வே

Latest Videos
Recommended Stories
Recommended image1
இனி கழுதை வளர்த்தே கோடீஸ்வரராகலாம்.! ரூ.50 லட்சம் வரை மானியம்.! எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம் இதோ.!
Recommended image2
இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு! நஷ்டத்தை லாபமாக மாற்றும் ஹெட்ஜிங் வித்தைகள்!
Recommended image3
ஏஐ வளர்ச்சியில்.. இந்த வேலைகள் எல்லாம் காணாமல் போகும்.. ஆந்த்ரோபிக் வெளியிட்ட அதிர்ச்சி பட்டியல்
Related Stories
Recommended image1
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி டிக்கெட் புக் செய்தால் கேஷ்பேக்.. சூப்பர் ஆஃபர்!
Recommended image2
பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. ரயில் டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடி.. எப்படி பெறுவது? முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved