மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷாக்... 18 மாத டிஏ நிலுவை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!
கோவிட் காலத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 18 மாத DA நிலுவைத் தொகை குறித்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது. இதனால் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புக்கு என்ன பதில் கிடைத்துள்ளது?

18 மாத டிஏ நிலுவை
கோவிட் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையை மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது குறித்து, மத்திய நிதி அமைச்சகம் தற்போது தெளிவான பதிலை அளித்துள்ளது. பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி, மத்திய அரசு அகவிலைப்படியின் மூன்று தவணைகளை நிறுத்தி வைத்தது. இது லட்சக்கணக்கான ஊழியர்களைப் பாதித்தது. இந்த நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மொத்தமாக 18 மாதங்களுக்கான அகவிலைப்படி அப்போது நிலுவையில் இருந்தது.
டிஏ நிலுவை
2020 ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையிலான காலத்திற்கான அகவிலைப்படி, நிறுத்தி வைக்கப்பட்ட முதல் தவணையாகக் கருதப்படுகிறது. 2020 ஜூலை 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலத்திற்கான அகவிலைப்படி, இரண்டாவது தவணையாக நிறுத்தி வைக்கப்பட்டது. 2021 ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையிலான காலத்திற்கான அகவிலைப்படி, மூன்றாவது மற்றும் கடைசி தவணையாக நிறுத்தி வைக்கப்பட்டது.
அகவிலைப்படி நிலுவை
இந்த 18 மாதங்களில் அகவிலைப்படியை நிறுத்தி வைத்ததன் மூலம், மோடி அரசு ₹34,402.32 கோடியைச் சேமித்தது. 2020-21ல் பெருந்தொற்று காரணமாக, நாடு முழுவதும் கிட்டத்தட்ட முடங்கிப் போயிருந்தது. இவ்வாறு சேமிக்கப்பட்ட பெரும் தொகை, பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. அந்த நேரத்தில், மோடி அரசு ஏழைகளுக்கான ரேஷன் அளவையும் அதிகரித்தது. பல புதிய மக்கள் நலத் திட்டங்களையும் அறிமுகப்படுத்தியது.
மத்திய அரசு ஊழியர்கள்
நாடாளுமன்றத்தில் தகவல்
நிதி அமைச்சகம்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

