- Home
- Business
- Gold Rate Today (நவம்பர் 13) : மேல் நோக்கி சீறிப்பாய்ந்த தங்கம் விலை.! வெள்ளி விலையும் அதிரடி உயர்வு.!
Gold Rate Today (நவம்பர் 13) : மேல் நோக்கி சீறிப்பாய்ந்த தங்கம் விலை.! வெள்ளி விலையும் அதிரடி உயர்வு.!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 94,400 ரூபாயாக அதிகரித்துள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கம் மீது முதலீடு செய்வதும் அமெரிக்க பொருளாதார சிக்கல்களும் விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது.

ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் ஏற்றம்.!
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. கிராமுக்கு 200 ரூபாய் விலை அதிகரித்துள்ளதால் திருமணம் வைத்துள்ளவர்களும் அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கடந்த வாரம் விலை குறைந்திருந்த நிலையில் தற்போது தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளதால் இல்லத்தரசிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இனி எப்போது குறையும் எனவும் அவர்கள் பொருளாதார நிபுணர்களை பார்த்து கேள்வி எழுப்புகின்றனர்.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 200 ரூபாய் உயர்ந்து 11 ஆயிரத்து 800 ரூபாயாக உள்ளது. அதேபோல் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 1,600 ரூபாய் அதிகரித்து 94,400 ரூபாயாக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். 1 கிராம் வெள்ளி 182 ரூபாய்க்கும் 1 கிலோ பார்வெள்ளி 1 லட்சத்து 82 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 9 ரூபாய் அதிகரித்துள்ளது.
சர்வதேச காரணங்களை தெரிஞ்சுக்குவோம்
அதேபோல் மதுரை, கோவை, தூத்துக்குடி, திருச்சி ஆகிய நகரங்களில் ஆபரணத்தங்கத்தின் விலை 11 ஆயிரத்து 800 ரூபாயாக உள்ளது. தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுவதால் விலை அதிகரித்தாலும் தங்கத்தில் முதலீடு செய்வதை நடுத்தர வர்க்கத்தினர் வாடிக்கையாக கொண்டிருப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விலை ரீடைல் சந்தையிலும் எதிரொலிக்கும் என்பதால் தங்கத்தை வாங்குவோர் திட்டமிட்டு வாங்குவது அவசியம்.
இந்த விலை ரீடைல் சந்தையிலும் எதிரொலிக்கும் என்பதால் தங்கத்தை வாங்குவோர் திட்டமிட்டு வாங்குவது அவசியம். அமெரிக்காவில் அதீத கடன் மற்றும் நிதி பற்றாக்குறை அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் சிக்கலாக மாறும் என முதலீட்டாளர்கள் நம்புவதாலும் தங்கம் மீதான முதலீட்டு அதிகரிக்க வழிவகுத்துள்ளது. இதனால் அடித்தட்டு மக்கள் கொஞ்சம் காத்திருந்து தங்கத்தில் முதலீடு செய்யலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.