- Home
- Business
- Gold Rate Today (November 10): மீண்டும் ராக்கெட் வேகமெடுக்கும் தங்கம்.! வெறிச்சோடிய நகைக்கடைகள்.!
Gold Rate Today (November 10): மீண்டும் ராக்கெட் வேகமெடுக்கும் தங்கம்.! வெறிச்சோடிய நகைக்கடைகள்.!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து ஒரு சவரன் 91 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சர்வதேச முதலீடுகள் அதிகரித்ததே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த விலை உயர்வு திருமணம் செய்யவிருப்பவர்கள் மற்றும் நடுத்தர மக்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

மீண்டும் மேல் நோக்கிய பாயும் தங்கம்
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. தங்கம் விலை அதிகரித்துள்ளதால் திருமணம் வைத்துள்ளவர்களும் அடித்தட்டு மற்றும் அடித்தட்டு மக்களும் கவலை அடைந்துள்ளனர். ஒரு சவரன் தங்கம் மீண்டும் 91 ஆயிரத்தை தாண்டியதால் இல்லத்தரசிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இனி குறைய வாய்ப்பே இல்லையா எனவும் அவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
ஆபரணத்தங்கம் வெள்ளி விலை
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து 11 ஆயிரத்து 410 ரூபாயாக உள்ளது. அதேபோல் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 880 ரூபாய் அதிகரித்து 91,280 ரூபாயாக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். 1 கிராம் வெள்ளி 167 ரூபாய்க்கும் 1 கிலோ பார்வெள்ளி 1 லட்சத்து 67 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்துள்ளது.
உள்ளூர் நிலவரமும் இதுதான்.!
அதேபோல் மதுரை, கோவை, தூத்துக்குடி, திருச்சி ஆகிய நகரங்களில் ஆபரணத்தங்கத்தின் விலை 11 ஆயிரத்து 410 ரூபாயாக உள்ளது. தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுவதால் விலை ஏற்ற இறக்கத்திற்கு காத்திருக்காமல் கையில் பணம் இருந்தால் அதனை தங்கத்தில் முதலீடு செய்வதை நடுத்தர வர்க்கத்தினர் வாடிக்கையாக கொண்டிருப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.