இந்த வங்கிகளில் அக்கவுண்ட் இருக்கா? எல்லாமே மாறப்போகுது மக்களே
இந்திய அரசு சிறிய பொதுத்துறை வங்கிகளை பெரிய வங்கிகளுடன் இணைக்கும் திட்டத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை வங்கித் துறையின் செயல்திறனை மேம்படுத்தி, கடன் வழங்கும் திறனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கி இணைப்பு
இந்தியாவின் வங்கி துறையில் மீண்டும் பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது என்று கூறலாம். அரசாங்கம் தற்போது சிறிய பொது வங்கிகளை பெரிய வங்கிகளுடன் இணைக்கும் திட்டத்தில் செயல்படுகிறது. இதனால் இந்தியாவில் உள்ள அரசு வங்கிகளின் எண்ணிக்கை மேலும் குறையக்கூடும். சிறிய வங்கிகள் பலவும் வரலாற்றாக மாறும் வாய்ப்பு உள்ளது. இதற்கான ஆலோசனைகள் ஏற்கனவே தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
மணி கன்ட்ரோல் வெளியிட்ட தகவல்படி, அரசு FY27-க்குள் பல சிறிய வங்கிகளை இணைக்கும் திட்டத்தில் உள்ளது. இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB), சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா (CBI), பாங்க் ஆஃப் இந்தியா (BOI) மற்றும் பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா (BOM) ஆகியவை இணைப்பு பட்டியலில் உள்ளன. இந்த வங்கிகள் SBI, பஞ்சாப் நேஷனல் பாங்க் (PNB) மற்றும் பாங்க் ஆஃப் பரோடா (BoB) போன்ற பெரிய வங்கிகளுடன் இணைக்கப்படலாம்.
பொதுத்துறை வங்கிகள்
இந்த இணைப்பு மூலம் அரசு வங்கிகளின் செயல்திறன் மேம்படும், குறைந்த லாபம், அதிக செலவுகள், NPA பிரச்சினைகள் குறையவும் உதவக்கூடும். இதனால் கடன் வழங்கும் திறன் மேலும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. வங்கித் துறை வலுவாகவும், சிறந்த அடுக்குமாடி அமைப்புடன் வளரவும் அரசு விரும்புகிறது. இந்த திட்டம் முதலில் அமைச்சரவை மட்டத்தில் விவாதிக்கப்பட்டு பின்னர் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும்.
வங்கி ஒருங்கிணைப்பு
இதற்கு முன்பும் இணைப்புகள் நடந்துள்ளன. 2017 முதல் 2020 வரை அரசு 10 வங்கிகளை இணைத்தது. இதனால் அரசு வங்கிகள் 27-இல் இருந்து 12-ஆக குறைந்தன. அப்போது OBC மற்றும் யூனிடெட் பாங்க் ஆகியவை PNB-இல் இணைக்கப்பட்டன. சிண்டிகேட் பாங்க் கனரா பாங்க்-இல் இணைக்கப்பட்டது. அதற்கு முன் SBI பல துணை வங்கிகளை (SBBJ, பாங்க் ஆஃப் பத்தியாலா, பாங்க் ஆஃப் ஹைதராபாத், பாரதிய மகளிர் வங்கி) இணைத்தது.