MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ATM Rules: இந்த தவறு நடந்தா வங்கி உங்களுக்கு இழப்பீடு தரணும்.. தெரியுமா?

ATM Rules: இந்த தவறு நடந்தா வங்கி உங்களுக்கு இழப்பீடு தரணும்.. தெரியுமா?

ATM Rules: ஏடிஎம்-ல் பணம் வராமல், கணக்கிலிருந்து மட்டும் பணம் பிடிக்கப்பட்டால் கவலைப்பட வேண்டாம். குறிப்பிட்ட நடைமுறையை பின்பற்றினால், பணத்தை திரும்பப் பெறுவதோடு சில சூழல்களில் இழப்பீடும் கிடைக்கலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Jun 26 2026, 09:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ஏடிஎம் பணம் வரவில்லை
Image Credit : our own

ஏடிஎம் பணம் வரவில்லை

நீங்க ஏடிஎம் பயன்படுத்தும்போது, பணம் வராம அக்கவுன்ட்ல இருந்து மட்டும் டெபிட் ஆன அனுபவம் இருக்கா? இந்த மாதிரி நேரத்துல என்ன செய்யணும், பணத்தை எப்படி திரும்ப வாங்குறது, தாமதமானா வங்கிக்கு ரிசர்வ் வங்கி (RBI) விதிக்கும் அபராதம் என்னன்னு இப்ப தெரிஞ்சுக்கலாம். முன்னாடி சின்ன வேலைக்குக் கூட பேங்க்குக்கு போக வேண்டியிருந்தது. ஆனா இப்போ நிலைமை மாறிடுச்சு. ஆனாலும், ஏடிஎம்-ல பணம் எடுக்கப் போய், பணம் வராம அக்கவுன்ட்ல மட்டும் கட் ஆனா பலரும் பதட்டப்படுவாங்க. ஆனா கவலைப்படாம, சரியான நேரத்துல சரியான நடவடிக்கை எடுத்தா போதும்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ஏடிஎம் ரீபண்ட்
Image Credit : INSTAGRAM

ஏடிஎம் ரீபண்ட்

ஏடிஎம்-ல பணம் வரலைன்னா, முதல்ல சில விஷயங்களை மனசுல வெச்சுக்கோங்க. திரும்பவும் பணம் எடுக்க முயற்சி செய்யாதீங்க. உங்க பேங்க் பேலன்ஸை செக் பண்ணுங்க. பணம் டெபிட் ஆகியிருந்தா, எடுத்த தொகை, ஏடிஎம் இருக்கும் இடம், பரிவர்த்தனை நேரம் போன்ற எல்லா விவரங்களையும் பத்திரமா வெச்சுக்கோங்க. புகார் கொடுக்கும்போது இந்தத் தகவல் ரொம்ப உதவியா இருக்கும்.

Related Articles

Related image1
DA Hike July 2026: 8வது சம்பள கமிஷனுக்கு முன் செம குட் நியூஸ்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்?
Related image2
கர்ப்பிணிகளின் வங்கி கணக்குக்கு வரும் ரூ.6,000.. இந்த ஆவணம் இருந்தால் போதும்!
36
ஏடிஎம் மெஷின்
Image Credit : Getty

ஏடிஎம் மெஷின்

உங்க அக்கவுன்ட்ல இருந்து பணம் கட் ஆகி, ஏடிஎம் மெஷின்ல இருந்து பணம் வரலைன்னா, தாமதிக்காம உங்க வங்கிக்கு தகவல் கொடுங்க. நீங்க புகார் பதிவு செஞ்சதும், வங்கி உங்களுக்கு ஒரு கம்ப்ளைன்ட் நம்பர் கொடுக்கும். அந்த நம்பரை பத்திரமா வெச்சுக்கோங்க. உங்க புகாரோட நிலையை தெரிஞ்சுக்கவும், அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கும் அது ரொம்ப உதவும்.
46
வங்கி ஏடிஎம் பதிவுகள்
Image Credit : Getty

வங்கி ஏடிஎம் பதிவுகள்

புகார் கிடைச்சதும், வங்கி ஏடிஎம் பதிவுகளையும், பரிவர்த்தனை லாக்-களையும் சரிபார்க்கும். இந்த விசாரணையில, ஏடிஎம்-ல இருந்து பணம் வந்ததா இல்லையான்னு தெரிஞ்சுடும். அக்கவுன்ட்ல இருந்து பணம் கட் ஆகி, மெஷின்ல இருந்து வரலைன்னு உறுதியானா, அந்தப் பணத்தை வாடிக்கையாளர் கணக்குக்கு வங்கி திரும்ப வரவு வெச்சிடும்.
56
ரிசர்வ் வங்கி விதிகள்
Image Credit : Getty

ரிசர்வ் வங்கி விதிகள்

ரிசர்வ் வங்கி (RBI) விதிகளின்படி, ஏடிஎம்-ல் பணம் வராமல் கணக்கில் பணம் கட் ஆகியிருந்தால், வங்கி 5 வேலை நாட்களுக்குள் பணத்தை திருப்பித் தர வேண்டும். அப்படித் தரத் தவறினால், வாடிக்கையாளருக்கு இழப்பீடு பெற உரிமை உண்டு. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், வங்கி வாடிக்கையாளருக்கு ஒரு நாளைக்கு 100 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். ஆனால், வாடிக்கையாளர் புகார் கொடுத்து, அதற்கான ரெஃபரன்ஸ் எண் இருந்தால் மட்டுமே இந்த இழப்பீடு கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
66
வங்கியில் புகார்
Image Credit : Getty

வங்கியில் புகார்

வங்கிக்கு புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், வாடிக்கையாளர் வங்கியின் குறை தீர்க்கும் அமைப்பை அணுகலாம். அதுமட்டுமில்லாமல், ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த குறைதீர்ப்பாளர் திட்டத்தின் (RBI Integrated Ombudsman Scheme) கீழேயும் புகார் செய்யலாம். இந்த மாதிரி ஒரு சம்பவம் உங்களுக்கு நடந்தால், முதலில் பதட்டப்படாதீர்கள். உடனடியாக வங்கிக்கு தகவல் கொடுங்கள். சரியான நேரத்தில் தகவல் கொடுத்தால், பணம் திரும்பக் கிடைக்க வாய்ப்பு அதிகம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தானியங்கிப் பணப் பட்டுவாடா இயந்திரம்
வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி
வங்கி விதிகள்
தானியங்கிப் பணப் பட்டுவாடா இயந்திர பரிவர்த்தனை விதிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vande Bharat Pets: செல்லப் பிராணியுடன் வந்தே பாரத் ரயிலில் பயணிக்கலாம்.. இந்திய ரயில்வே வெளியிட்ட சூப்பர் அப்டேட்
Recommended image2
Passport: அவசரமாக வெளிநாடு போகணுமா? 3 நாளில் பாஸ்போர்ட் கைக்கு வரும்.. எப்படி தெரியுமா? முழு விவரம்!
Recommended image3
DA Hike July 2026: 8வது சம்பள கமிஷனுக்கு முன் செம குட் நியூஸ்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்?
Related Stories
Recommended image1
DA Hike July 2026: 8வது சம்பள கமிஷனுக்கு முன் செம குட் நியூஸ்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்?
Recommended image2
கர்ப்பிணிகளின் வங்கி கணக்குக்கு வரும் ரூ.6,000.. இந்த ஆவணம் இருந்தால் போதும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved