MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • டோல்கேட்களில் நிற்க தேவையில்லை.. சென்னை–பெங்களூரு சாலையில் ஏஐ கேமரா.. பயணிகள் மகிழ்ச்சி.!

டோல்கேட்களில் நிற்க தேவையில்லை.. சென்னை–பெங்களூரு சாலையில் ஏஐ கேமரா.. பயணிகள் மகிழ்ச்சி.!

சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட்களை மாற்றும் MLFF என்ற புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகிறது. இதனால், வாகனங்கள் நிற்காமல் வேகமாக பயணிக்கலாம், பயண நேரமும் குறையும்.

2 Min read
Author : Raghupati R
Published : Nov 07 2025, 01:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஏஐ டோல் சிஸ்டம்
Image Credit : Google

ஏஐ டோல் சிஸ்டம்

தமிழகத்தில் மற்றும் கர்நாடகாவை இணைக்கும் முக்கியமான சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலை வழிகளில் பெரிய மாற்றம் வருகிறது. இனி டோல்கேட் அருகே வாகனங்கள் நிற்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகும். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) MLFF – Multi Lane Free Flow System என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி, பழைய டோல்பூத் முறையை மெதுவாக மாற்றத் தொடங்கியுள்ளது.

25
கேமரா டோல் முறை
Image Credit : our own

கேமரா டோல் முறை

இந்த புதிய முறைமையில் AI அடிப்படையிலான ANPR (தானியங்கி எண் தட்டு அங்கீகாரம்) கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இவை வாகன எண்களை தானாகப் பிடித்து, அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது FASTag கணக்கில் இருந்து கட்டணத்தை கழித்துவிடும். இந்த வாகனங்கள் டோல்பூட்டில் நிற்க வேண்டிய அவசியமே இல்லை. வாகனங்கள் 100 முதல் 120 கிமீ வேகத்திலும் இலகுவாக சென்று விடலாம். இதன்மூலம் பயண நேரம் குறைவதோடு, சாலை நெரிசலும் குறையும்.

Related Articles

Related image1
இந்தியாவின் அகலமான அதிவேக நெடுஞ்சாலை இதுதான்! ஒரே நேரத்தில் 14 வாகனங்கள் செல்லலாம்!
Related image2
14 நாடுகளை இணைக்கும் ஒரே நெடுஞ்சாலை! எங்கு இருக்கு தெரியுமா?
35
சென்னை–பெங்களூரு நெடுஞ்சாலை
Image Credit : Google

சென்னை–பெங்களூரு நெடுஞ்சாலை

முதற்கட்டமாக, ஸ்ரீபெரும்புதூர் (நெமிலி), சென்னசமுத்திரம் (வேலூர் அருகே), மற்றும் பாரனூர் (ஜிஎஸ்டி பாதை) ஆகிய மூன்று இடங்களில் இந்த புதிய கேமரா முறை பரிசோதனை அடிப்படையில் தொடங்கப்படுகிறது. இதன் வெற்றியைப் பொருத்து, தமிழகத்தின் மற்ற டோல்கேட்களிலும் அடுத்த கட்டங்களில் இது விரிவுபடுத்தப்படும் என NHAI தெரிவித்துள்ளது.

45
நெடுஞ்சாலை ஆணையம்
Image Credit : Social Media

நெடுஞ்சாலை ஆணையம்

பயணிகளுக்கு இதனால் பல நன்மைகள் கிடைக்கும். டோல்கேட்களில் நீண்ட வரிசையில் நிற்கும் சலிப்பு மறையும். நேரமும் எரிபொருளும் சேமிக்கப்படும். அதேசமயம், போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதால் சாலை விபத்துகள் குறையும் என நிபுணர்கள் நம்புகின்றனர். மேலும், மின் கட்டணம் தானாக கழிக்கப்படுவதால் பணம் கொடுத்து பரிமாற்றம் செய்வது அவசியம் இருக்காது.

55
தானியங்கி கட்டண வசூல்
Image Credit : Google

தானியங்கி கட்டண வசூல்

எனினும், பயணிகள் தங்கள் FASTag கணக்கை புதுப்பித்து, அதில் போதுமான இருப்பு வைத்திருப்பது அவசியம். சில டோல்கேட்களில் தற்போது சோதனை நிலையில் இருப்பதால், சில இடங்களில் பழைய முறை தொடரலாம். இருப்பினும், இது முழுமையாக அமலுக்கு வந்தால், டோல்கேட் இல்லா பயண அனுபவம் தமிழகத்தில் நிஜமாக மாறும். சென்னை–பெங்களூரு பாதையில் இந்த புதிய முறை பயணிகளுக்கு “சீரான போக்குவரத்து – சுலபமான பயணம்” என்கிற புதிய யுகத்தை துவங்குகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
சுங்கச்சாவடி கட்டணங்கள்
ஃபாஸ்டேக்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.20 கட்டினால் ரூ.2 லட்சம் காப்பீடு.. ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு பாதுகாப்பு திட்டம்
Recommended image2
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி டிக்கெட் புக் செய்தால் கேஷ்பேக்.. சூப்பர் ஆஃபர்!
Recommended image3
இந்த 5 விஷயங்கள் நடந்தால்.. உங்கள் வங்கி கணக்கை பயன்படுத்த முடியாது.. உடனே செக் பண்ணுங்க
Related Stories
Recommended image1
இந்தியாவின் அகலமான அதிவேக நெடுஞ்சாலை இதுதான்! ஒரே நேரத்தில் 14 வாகனங்கள் செல்லலாம்!
Recommended image2
14 நாடுகளை இணைக்கும் ஒரே நெடுஞ்சாலை! எங்கு இருக்கு தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved