MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • பொழுதுபோக்கு
  • Bigg Boss
  • Bulk ஆன தொகையுடன் வந்த பணப்பெட்டி... அலேக்காக தூக்கிக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பப்போவது யார்?

Bulk ஆன தொகையுடன் வந்த பணப்பெட்டி... அலேக்காக தூக்கிக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பப்போவது யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் தற்போது பெரும் தொகை உடன் கூடிய பணப்பெட்டி வீட்டுக்குள் அனுப்பப்பட்டு உள்ளதால் அதை யார் எடுக்க போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

2 Min read
Ganesh A
Published : Jan 02 2024, 10:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது பைனலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. 90 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சி முடிவடைய இன்னும் இரு வாரங்களே உள்ளதால், யார் டைட்டில் வெல்லப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் கிளம்பி உள்ளது. தற்போது விசித்ரா, விஜய் வர்மா, தினேஷ், மாயா, பூர்ணிமா, மணிச்சந்திரா, அர்ச்சனா, விஷ்ணு விஜய் ஆகிய 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ளனர்.

24

இதில் கடந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெற்றிபெற்ற விஷ்ணு விஜய், நேரடியாக பைனலுக்குள் நுழைந்துள்ளார். இதனால் இந்த வாரம் விஷ்ணுவை தவிர அனைவரும் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பிடித்து உள்ளனர். இந்த நிலையில், இந்த வாரம் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் ஆரம்பமானதால், போட்டியாளர்களுக்கு இரவு விருந்து கொடுத்து அவர்களுக்காக டிஜே பார்ட்டியையும் ஏற்பாடு செய்திருந்தார் பிக்பாஸ்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34

இதனால் நேற்றைய எபிசோடு முழுவதும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருந்தது. இந்த நிலையில், இன்று பணப்பெட்டியை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பிவைத்து அடுத்த டுவிஸ்ட்டை கொடுத்துள்ளார் பிக்பாஸ். முதலில் ரூ.1 லட்சம் பணத்தொகை உடன் பிக்பாஸ் வீட்டுக்குள் பணப்பெட்டி அனுப்பி வைக்கப்பட்டது. அதை யாரும் எடுக்காததால் அடுத்தடுத்து பணத்தின் மதிப்பை பிக்பாஸ் அதிகரித்துக்கொண்டே சென்றிருக்கிறார்.

44

ரூ.5 லட்சம் வரை பணத்தின் மதிப்பை அதிகரித்தும் யாரும் பெட்டியை எடுக்கவில்லை. தினேஷ் 1 கோடிக்கு மேல் வந்தால் எடுக்கும் ஐடியாவில் இருப்பதாக கூறுகிறார். மணி, விஜய் வர்மா, பூர்ணிமா ஆகியோரும் இந்த பெட்டியை எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சீசனில் அமுதவாணன் ரூ.10 லட்சத்துக்கு மேல் பணப்பெட்டி உடன் வெளியேறினார். அதேபோல் இந்த சீசனிலும் யார் வெளியேறப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... தியேட்டரில் கூட்டமின்றி காத்துவாங்கும் சலார்! வேறு வழியின்றி படத்தை பார்சல் பண்ணி OTTக்கு அனுப்பிய படக்குழு..?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் (தமிழ்)
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved