MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • பொழுதுபோக்கு
  • Bigg Boss
  • பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் கைது... கோப்பையை வென்ற கையோடு ஜெயிலுக்கு சென்றதன் பின்னணி என்ன?

பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் கைது... கோப்பையை வென்ற கையோடு ஜெயிலுக்கு சென்றதன் பின்னணி என்ன?

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பல்லவி பிரசாந்த் என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

1 Min read
Ganesh A
Published : Dec 21 2023, 08:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Pallavi Prashanth

Pallavi Prashanth

சண்டைகளுக்கு பஞ்சமில்லாத ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்நிகழ்ச்சி இந்தியில் பிரபலமானதை தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் தொடங்கப்பட்டது. தமிழில் இந்நிகழ்ச்சியை கமல்ஹாசனும், தெலுங்கில் நாகார்ஜுனாவும், மலையாளத்தில் மோகன்லாலும் தொகுத்து வழங்கி வருகின்றனர். 

24
Pallavi Prashanth Arrested

Pallavi Prashanth Arrested

தற்போது தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் தெலுங்கிலும் 7-வது சீசன் அண்மையில் முடிவடைந்துள்ளது. இதில் பல்லவி பிரசாந்த் என்பவர் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். பைனலில் அமர்தீப் என்பவருக்கும் பல்லவி பிரசாந்துக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசத்தில் பல்லவி பிரசாந்த் வெற்றி பெற்றார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
Pallavi Prashanth, Amardeep

Pallavi Prashanth, Amardeep

பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் சண்டையிட்டுக் கொண்டாலும் வெளியே வந்ததும் அவர்கள் சமாதானம் ஆகி நண்பர்களாகி விடுவார்கள். ஆனால் தெலுங்கு பிக்பாஸில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது. பிக்பாஸ் 7 டைட்டில் வின்னராக பல்லவி பிரசாந்த் அறிவிக்கப்பட்டதும் அவரது ரசிகர்கள் 2-ம் இடம் பிடித்த அமர்தீப்பின் காரை சாலையில் மறித்து தாக்கி உள்ளனர். இதில் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

44
Amardeep chowdary car attacked

Amardeep chowdary car attacked

அதுமட்டுமின்றி அரசு பேருந்துகளின் கண்ணாடியும் உடைக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் செய்த இந்த அடாவடித்தனத்தால் தற்போது பல்லவி பிரசாந்த் தெலங்கானா போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதால் அவரை கைது செய்த போலீசார், அவர்மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவும் செய்துள்ளது. ஒரு ரியாலிட்டி ஷோவுக்காக இப்படி ரசிகர்கள் அடாவடித்தனம் செய்தது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... சென்னைல தான் நான் இயக்குனர்; இங்க இல்ல... என்னுடைய கதறலை கேட்டு உதயநிதி ஓடி வந்தார்- மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved