Asianet News TamilAsianet News Tamil

FIFA World Cup 2022: போர்ச்சுகலை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது தென்கொரியா

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் ஏற்கனவே காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட போர்ச்சுகல் அணி, இன்று தென்கொரியாவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
 

fifa world cup 2022 south korea beat portugal and qualify for round 16
Author
First Published Dec 2, 2022, 10:57 PM IST

22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் சுற்று போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. நாளை முதல் காலிறுதிக்கு முந்தைய சுற்று (ரவுண்ட் 16) போட்டிகள் தொடங்குகின்றன.

இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கி 2 போட்டிகள் நடந்தன. ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதிக்கு பெற்ற போர்ச்சுகல் அணி தென்கொரியாவை எதிர்கொண்டது. 

BAN vs IND: ரிஷப் பண்ட்டுக்கு இதுவே கடைசி சான்ஸ்..! சொதப்பினால் இந்திய அணியில் இடம் காலி

இந்த போட்டி தொடங்கிய 5வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் ரிச்சர்டோ முதல் கோல் அடித்தார். ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் தென்கொரியா வீரர் கிம் யங்-வோன் கோல் அடிக்க, ஆட்டம் 1-1 என சமனடைந்தது. 2வது பாதி ஆட்டத்தில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. 90 நிமிடங்கள் முடிந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் முதல் நிமிடத்திலேயே தென்கொரிய வீரர் ஹீ-சன் கோல் அடிக்க, 2-0 என வெற்றி பெற்ற தென்கொரியா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. போர்ச்சுகல் அணி தென்கொரியாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

நாங்களும் சளைச்சவங்க இல்லடா.. அபாரமாக பேட்டிங் ஆடி இங்கிலாந்துக்கு தக்க பதிலடி கொடுத்த பாகிஸ்தான் ஓபனர்கள்

போர்ச்சுகல் - தென்கொரியா அணிகள் இடம்பெற்றிருந்த அதே க்ரூப் எச்-ல் இடம்பெற்றிருந்த உருகுவே - கானா அணிகளுக்கு இடையேயான போட்டியில் உருகுவே 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றும் கூட, தென்கொரியா அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றதால் உருகுவே அணி தொடரை விட்டு வெளியேறியது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios