Asianet News TamilAsianet News Tamil

நெதர்லாந்து - ஈகுவடார் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி... 1-1 என்ற கோல் கணக்கில் டிரா!!

நெதர்லாந்து - ஈகுவடார் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1க்கு 1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

football match between netherlands and ecuador ended in draw
Author
First Published Nov 26, 2022, 12:08 AM IST

நெதர்லாந்து - ஈகுவடார் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1க்கு 1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஏ பிரிவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்து அணி மற்றும் ஈக்வடார் அணி ஆகிய இரு அணிகளும் மோதின. நெதர்லாந்து அணி செனகல் அணியுடனான முதல் போட்டியை டிரா செய்திருந்தது.

இதையும் படிங்க: காயத்தால் க்ரூப் போட்டிகளிலிருந்து விலகிய நெய்மர்.. பிரேசில் அணிக்கு மரண அடி

இதேபோல் ஈகுவடார் அணி முதல் போட்டியில் கத்தார் அணியை வீழ்த்தியிருந்தது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஆட்டம் தொடங்கிய 6வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி முதல் கோலை அடித்தது. முதல் பாதி ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் ஈகுவடார் அணி கோல் ஒன்றை அடித்து அசத்தியது. ஆனால் நடுவர்கள் அந்த கோலை அங்கீகரிக்கவில்லை.

இதையும் படிங்க: கத்தாரை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி செனகல் அபார வெற்றி

இதனால் முதல் பாதி ஆட்டம் முடிவில் 1-0 என்ற கணக்கில் நெதர்லாந்து அணி முன்னிலையில் இருந்தது. பின்னர் முதல் பாதி தொடக்கத்தில் நெதர்லாந்து கோல் அடித்ததை போல், இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் ஈகுவடார் அணி முதல் கோலை அடித்தது. இதன் பின் இரு அணிகளும் கோல் அடிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

Follow Us:
Download App:
  • android
  • ios