Asianet News TamilAsianet News Tamil

மிளகாய் பொடி தூவி இளைஞர் கொடூர கொலை.. ஆத்திரம் தீராததால் தலையை துண்டித்த பயங்கரம்..!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை அடுத்த மதனப்பள்ளி புறநகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் சென்றுக்கொண்டிருந்த போது கண்களில் மிளகாய் பொடி தூவி கொலை செய்யப்பட்டார். 

youth brutal murder in andhra pradesh
Author
First Published Dec 29, 2022, 11:04 AM IST

மிளகாய் பொடி தூவி இளைஞர் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை அடுத்த மதனப்பள்ளி புறநகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் சென்றுக்கொண்டிருந்த போது கண்களில் மிளகாய் பொடி தூவி கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, ஆத்திரம் தீராததால் அந்த மர்ம கும்பல் இளைஞரின் தலையை துண்டித்து தனியாக எடுத்து சென்றது. 

youth brutal murder in andhra pradesh
 
இந்நிலையில், அப்பகுதியாக சென்ற பொதுமக்கள் தலையில்லாமல் இளைஞரின் உடல் இருப்பதையும், அதன் அருகில் இருசக்கர வாகனம் ஒன்று சாலையோரமாக விழுந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

youth brutal murder in andhra pradesh

பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலையை தேடி வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது மிளகாய் பொடி தூவி தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட நபர் யார்? அவரை கொலை செய்தது யார்? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios