செப்டிக்டேங்க் தொழிலாளியின் 31 வயதுடைய மனைவி, சம்பவத்தன்று தனது வீட்டில் உள்ள மேற்கூரை இல்லாத பாத்ரூமில் குளித்து கொண்டிருந்தார். 

பாத்ரூமில் திருமணமான பெண் குளிப்பதை வளைத்து வளைத்து வீடியோ எடுத்த பக்கத்து வீட்டை சேர்ந்த 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பிராந்தியம் நிரவி பகுதியில் வசிக்கும் செப்டிக்டேங்க் தொழிலாளியின் 31 வயதுடைய மனைவி, சம்பவத்தன்று தனது வீட்டில் உள்ள மேற்கூரை இல்லாத பாத்ரூமில் குளித்து கொண்டிருந்தார். அப்போது அவரது பக்கத்து வீட்டில் உள்ள ஜன்னல் வெண்டிலேட்டரில் இருந்து யாரோ செல்போனில் அப்பெண் குளிப்பதை வீடியோவாக படம் பிடித்துள்ளார். இதை அங்கிருந்த அப்பெண்ணின் மகன் பார்த்துவிட்டு தாயிடம் தகவல் கூறியுள்ளார். இதனை கேட்டு தாய் அதிர்ச்சியடைந்துள்ளார். 

இதையும் படிங்க;- ஃபர்ஸ்ட் நைட் முடிந்த மறுநாளே இளம்பெண் செய்த காரியம்.. 15 லட்சத்தை இழந்த புதுமாப்பிள்ளை கதறல்.!

 இதுபற்றி அவர் தனது கணவரிடம் கூறிய நிலையில், தம்பதியர் பக்கத்து வீட்டிற்கு சென்று படம்பிடித்த நபர் யார்? என்பது குறித்து விசாரித்துள்ளனர். அப்போது, அந்த செல்போன் பக்கத்து வீட்டில் வசிக்கும் அருள் என்பவரிடன் மகன் உசேன் என்ற திலிப்குமார்(21) என்பது தெரியவந்தது. அவர் உடனே அங்கிருந்து தலைமறைவான நிலையில் பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் நிரவி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தெதாடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், தொழிலாளியின் மனைவியை, திலிப் குமார் வீடியோ பிடித்திருப்பது உறுதியானது. 

இதையும் படிங்க;- ஒரு பேராசிரியைக்கு இவ்வளவு ஒரு காமவெறியா? கள்ளக்காதலை துண்டித்த காதலன்.. 40 இடங்களில் கத்தியால் குத்தி கொலை

இதனையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாத்ரூமில் பக்கத்து வீட்டு பெண் குளிப்பதை படம்பிடித்த வாலிபர் திலிப்குமார், தினசரி கூலி தொழிலாளி ஆவார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.