28 வயது பெண் தினமும் காட்டுப்பகுதியில் ஆடு மேய்க்க வருவது வழக்கம். இந்த பெண்ணை எப்படியாவது அடைய வேண்டும் என்று எண்ணினார். இதனையடுத்து,  அந்த பெண்ணிடம் சைநாக பேச்சுக் கொடுத்து பழக ஆரம்பித்தார். பின்னர், பெண்ணை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை அந்த பெண் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டார்.  

ஆடு மேய்க்க சென்ற பெண்ணை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய 80 வயது கிழவனை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆடு மேயக்கும் பெண் பலாத்காரம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கு மணிகண்டம் பகுதியை சேர்ந்தவர் சங்கப்பிள்ளை(80) என்பவர் வசித்து வருகிறார். வேலை வெட்டியில்லாமல் அந்த பகுதியில் உள்ள ஒரு காட்டில் சுற்றி திரிந்துகொண்டிருந்தார். இவருக்கு வயதானதால் இவர் வீட்டிற்கு சாப்பிட மட்டும் போய் விட்டு மற்ற நேரங்களில் அங்கேயே வெட்டியாக சுற்றி கொண்டிருப்பார். 

இதையும் படிங்க;- எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அடுத்தவன் பொண்டாட்டியுடன் உல்லாசம்.. போலீஸ் ஸ்டேஷன் அருகே நடந்த பயங்கரம்.!

இளம்பெண் கர்ப்பம்

இந்நிலையில், 28 வயது பெண் தினமும் காட்டுப்பகுதியில் ஆடு மேய்க்க வருவது வழக்கம். இந்த பெண்ணை எப்படியாவது அடைய வேண்டும் என்று எண்ணினார். இதனையடுத்து, அந்த பெண்ணிடம் சைநாக பேச்சுக் கொடுத்து பழக ஆரம்பித்தார். பின்னர், பெண்ணை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை அந்த பெண் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டார். 

ஆனால், சில மாதங்களுக்கு பிறகு அப்பெண்ணுக்கு திடீரென தீராத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அப்பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறினர். இதனைக்கேட்டு உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக அப்பெண்ணிடம் கேட்டபோது நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். 

இதையும் படிங்க;- உல்லாசத்துக்கு அழைத்த கள்ளக்காதலன்.. வர மறுத்த கள்ளக்காதலி.. இறுதியில் நடந்தது என்ன?

போலீஸ் கைது

இதுதொடர்பாக ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சங்க பிள்ளையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.