உன் மகன் ஞாபகமாக இருக்கிறது. அவனை பார்க்கணும் போல் உள்ளது என்று கூறி சென்னைக்கு வந்துள்ளார். இதனையடுத்து, அந்த பெண்ணிடம் நெருக்கமாக பழகி, பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். அதை தனது செல்போனில் அந்த பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ எடுத்துள்ளார். 

திருமணமான பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து கொலை மிரட்டல் விடுத்த கொல்கத்தா ஓட்டுநரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வாடகை வீட்டில் கொல்கத்தாவை சேர்ந்த 37 வயது பெண் தங்கியிருந்தார். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளான். இந்நிலையில், கொல்கத்தாவில் நடைபெறும் உறவினர் திருமணத்திற்கு இந்த பெண் சென்றுள்ளார். அங்கு ஒரு காரை அந்த பெண், புக் செய்தார். அந்த கார் டிரைவர், 3 நாள் கொல்கத்தாவில் இவருக்கு கார் ஓட்டியுள்ளார். பின்னர் சென்னை திரும்பினார். இதனையடுத்து, அந்த கார் ஓட்டுநர் பெண்ணின் செல்போன் எண்ணை பெற்று அடிக்கடி பேசியுள்ளார். 

மேலும் உன் மகன் ஞாபகமாக இருக்கிறது. அவனை பார்க்கணும் போல் உள்ளது என்று கூறி சென்னைக்கு வந்துள்ளார். இதனையடுத்து, அந்த பெண்ணிடம் நெருக்கமாக பழகி, பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். அதை தனது செல்போனில் அந்த பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ எடுத்துள்ளார். பின்னர், அந்த வீடியோவை காட்டி பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் கார் டிரைவரின் நம்பரை பிளாக் செய்து பேசுவதை தவிர்த்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த கார் டிரைவர், அந்த பெண்ணை சரமாரியாக தாக்கி செல்போனை பிடுங்கிக் கொண்டு கொல்கத்தாவுக்கு சென்று விட்டார். அதன் பின்னர் பெண்ணுடைய கணவருக்கு போன் செய்து, ‘உன் மனைவியுடன் நான் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளேன். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. உன் மனைவி என்னிடம் பேசாவிட்டால் உங்கள் உறவினர்களுக்கு உல்லாச வீடியோவை அனுப்பி விடுவேன் என்று மிரட்டி உள்ளார்.இது தொடர்பாக அந்த பெண் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொல்கத்தா விரைந்து அந்த நபரை செய்தனர். இதனையடுத்து, சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.