பட்டப்பகலில் காரின் பின்பக்க இருக்கையில் வைத்து இளம்பெண் கதற கதற பலாத்காரம்... 3 பேர் போக்சோவில் கைது..!
செஞ்சி அருகே பட்டப்பகலில் காரின் பின் சீட்டில் வைத்து இளம்பெண்ணை மாறி மாறி3 பேர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
செஞ்சி அருகே பட்டப்பகலில் காரின் பின் சீட்டில் வைத்து இளம்பெண்ணை மாறி மாறி3 பேர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கெடார் கிராமத்தைச் சேர்ந்த முருகையன் என்பவரது மகன் சுரேஷ். இவர் நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணை செல்போன் மூலம் தொடர்புகொண்டு அவருக்கு சுடிதார் வாங்கி வந்திருப்பதாகக் கூறி அதை வாங்கிச் செல்லும்படி அலமேலு என்பவரது நிலத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.
அந்தப் பெண்ணும் அதை நம்பி சுபாஷ் கூறிய அந்த இடத்திற்குச் சென்றுள்ளார். அங்கு சுபாஷ், அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்கள் நாகேஷ் மகன் விக்னேஷ் (25), பழனிவேல் மகன் சுபாஷ் ( 22) ஆகிய மூவரும் ஒரு காருடன் அங்கே காத்திருந்தனர். அந்த இளம்பெண் சுபாஷ் அருகில் வந்ததும் விக்னேஷ் உள்ளிட்ட 3 பேரும் இளம் பெண்ணைக் கட்டாயப்படுத்தி அந்தக் காரின் பின் பக்கம் ஏற்றியுள்ளனர். இதனையடுத், வாயை பொத்தி காரின் பின்பக்க இருக்கையில் வைத்தே அந்தப் பெண்னை மாறி மாறி 3 பேரும் கதற கதற பலாத்காரம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக இளம்பெண் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சம்பவம் தொடர்பாகப் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரையும் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.