மனைவி துடிதுடிக்க வெட்டிக்கொலை... கணவன் தலைமறைவு...!
ஓட்டப்பிடாரம் அருகே மனைவியை வெட்டி கொலை செய்து விட்டு தலைமறைவாக உள்ள கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓட்டப்பிடாரம் அருகே மனைவியை வெட்டி கொலை செய்து விட்டு தலைமறைவாக உள்ள கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள எப்போதும் வென்றான் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பழனிமுருகன் (43), இவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராமுத்தாய் என்ற காசி ராக்கம்மாள் (38). இவர்களுக்கு ஷர்மிளா (19) என்ற மகளும், முத்துமகேஷ் (15), தமிழ்செல்வம் (11) என்ற மகன்களும் உள்ளனர். மகள் ஷர்மிளா காதலித்து திருமணம் செய்து கொண்டார். மகன்கள் முத்தமிழ் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு, 6-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்நிலையில், மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் பழனிமுருகனுக்கும், காசி ராமுத்தாய்க்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், காசி ராமுத்தாய் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது மகன்களை அழைத்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர், பள்ளிக்கூடம் திறந்ததால் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அவர் மகன்களுடன் வீட்டுக்கு திரும்பினார். அவர் வீட்டுக்கு வந்த பின்னரும் கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. இதில், ஆத்திரமடைந்த கணவர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த காசி ராமுத்தாய் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் பழனிமுருகன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காசி ராமுத்தாய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள பழனிமுருகனை தேடி வருகின்றனர்.